tamilnadu

சந்திரயான்-3: பாதுகாப்பாக தரையிறக்க முயற்சி

சென்னை, ஆக.21- சந்திரயான் -3 விண்கலம் தற்போது  நிலாவில் பாறைகள், கற்கள் போன்ற வற்றை தவிர்த்து, பாதுகாப்பான தரையிறங்கும் இடத்தைத் தேர்வு செய்யும் சிக்னல்களை பூமியில் இருந்து அறிவியலாளர்கள் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இஸ்ரோவின் சந்திரயான்-3 திட்டம் அதன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. படிப்படியாக தரையிறங்குவதற்கு பணிகளை மேற்கொள்ளும் சந்திர யான் விண்கலத்தின் விக்ரம் லேண்டர்  நிலாவில் பாதுகாப்பாக இறங்கு வதற்கான இடத்தைத் தேடிக் கொண்டிருக்கிறது. இது தொடர்பான புதிய புகைப்படங் களையும் அவ்வப்போது விக்ரம் லேண்டர் பூமிக்கு அனுப்பிக் கொண்டி ருக்கிறது. தற்போது நிலாவில் பாறை கள், கற்கள் போன்றவற்றை தவிர்த்து,  பாதுகாப்பான தரையிறங்கும் இடத்தைத் தேர்வு செய்யும் சிக்னல்  களை பூமியில் இருந்து விஞ்ஞானிகள் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பணியின் போது எடுக்கப் பட்ட புகைப்படங்களை இஸ்ரோ வெளி யிட்டிருக்கிறது. அதன்படி, ஆபத்தான இடத்தைத் தவிர்க்க உதவும் கேமரா வால் இந்தப் புகைப்படங்கள் எடுக்கப் பட்டுள்ளன.