அகர்தலா, மார்ச் 4- திரிபுராவில் பாஜக முன் னெப்போதும் இல்லாத அளவிற்கு பல்வேறு தில்லுமுல்லுகளையும் செய்து மிகச்சிறு அளவிலான பெரும் பான்மையுடன் தேர்தலில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர் தலில் மொத்தமுள்ள 60 தொகுதி களில் பாஜக கூட்டணி 44 இடங்க ளைப் பெற்றிருந்த நிலையில், நடப்பு சட்டப்பேரவைத் (2023) தேர்தலில் 11 தொகுதிகளை இழந்து 33 தொகு திகளுடன் அறுதி பெரும்பான்மை யுடன் ஆட்சியை பிடித்துள்ளது பாஜக கூட்டணி. தேர்தல் அறிவிப்பு வெளியான தினத்திலிருந்து பாஜக குண்டர்கள் இடது முன்னணி - காங்கிரஸ் ஊழி யர்கள், வீடுகள் மீது தாக்குதல் நடத்தி வன்முறை வெறியாட்டங்களை தொடங்கினர். இந்த வன்முறை தேர் தல் பிரச்சாரங்களிலும், வாக்குப் பதிவு நாள்களிலும், வாக்கு எண் ணிக்கை நடைபெற்ற நாள்களிலும் அரங்கேறிய நிலையில், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட தினத்தி லிருந்து சிபிஎம் ஊழியர்கள், வீடுகள் மீது வன்முறை சம்பவங்கள் மிக மோசமாக நடைபெற்று வருகிறது
சிபிஐ(எம்) எம்எல்ஏ ரப்பர் தோட்டத்திற்கு தீ வைப்பு
* ஜுபராஜ்நகரில் புதிதாக தேர்ந் தெடுக்கப்பட்ட சிபிஎம் எம்எல்ஏ சைலேந்திர நாத்தின் ரப்பர் தோட்டம் பாஜகவினர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது.
* அகர்தலாவின் பதர்காட் செயலா ளர் ஷியாமல் ராயின் வீடு தாக் கப்பட்டது.
* ஸ்ரீபள்ளியில் மூத்த பத்திரிகையா ளர் சமீர் தார் வீடும், அதே பகுதி யில் உள்ள மேலும் 5 வீடுகள், தூத்பூரில் 2 வீடுகள் என மொத் தம் 7 சிபிஐ(எம்) ஊழியர்களின் மீது பாஜக குண்டர்கள் தாக்கு தல் நடத்தினர்.
* குமார்காட், பெச்சார்தோல், தாஸ் காரி பகுதிகளின் பொது இடங்க ளில் கும்பல் தாக்குதலை தொடுத் தது பாஜக கும்பல்.
* ஜிரானியா பஜாரின் சித்தரஞ் சன் பாலியில் உள்ள பள்ளி ஆசி ரியர் ராணா சக்ரவர்த்தியின் வீடும் தாக்கப்பட்டது. பாஜக கும்பல் கதவை உடைத்து, ஜன் னல் கண்ணாடிகளை உடைத்து, அவரது மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தியது.
* கிருஷ்ணாநகர் சிபிஐ(எம்) செய லாளர் ரஞ்சன் தாஸின் வீடு அடித்து நொறுக்கப்பட்டது.
* பிஷால்கரின் சாரிலம் பகுதியில் 16 சிபிஎம் ஊழியர்களின் வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. இதில் சஞ்சய் முல்லிக் என்பவரின் வீடு முற்றிலும் எரிக்கப்பட்டது.
* இடது முன்னணிக்கு வாக்கு அளித்ததற்காக அரசு ஊழியர் ஒருவரின் கைகள் உடைக்கப் பட்டன. அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கவும் மேல்சிகிச் சைக்காக மருத்துவமனைக்குச் செல்ல விடாமல் பாஜக குண்டர் கள் தடுத்தனர்.
* உதய்பூரில் தீவைப்பு, வன்முறை சம்பவங்கள் அதிகமாக அரங்கே றின. பாக்மா பகுதியில் வாலிபர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் பிக்ரம் கோஷின் கடை எரிக்கப் பட்டது.
* மத்திய ராஜர்பாக் பகுதியில் சிபிஎம் தலைவர் ரகல் மோண்ட லின் வீடு தாக்கப்பட்டு சேதப் படுத்தப்பட்டது.
* கர்ஜி பகுதியில் உள்ளூர் நாளித ழான புரோட்டிபாடி கோலோமில் பணிபுரியும் எழுத்தாளர் ஒருவ ரின் வீடு தாக்கப்பட்டதுடன், அவ ரது ரப்பர் தோட்டம் தீயில் எரிந்து நாசமானது.
* பாஜக தோல்வியடைந்த கோவா யில் தீ வைப்பு - வன்முறை சம்ப வங்களும், சிங்கிச்சாரா, லால் சரா, வடக்கு துர்காநகர், சோன டோலா, கணகி, பஹர்முரா ஆகிய பகுதிகள் வன்முறையால் கடு மையாக பாதிக்கப்பட்டன.
* தர்மா நகர் பகுதியில் சிபிஎம் ஊழியர்களின் வீடு கள் சூறையாடப்பட்டு சேதப்படுத்தப்பட்டன.
* சாந்திபஜார், கமால்பூர் ஆகிய பகுதிகளில் சிபிஎம் ஊழியர்களின் கடைகள், வீடுகள் அடித்து நொறுக் கப்பட்டன. மேலும் அப்பகுதியில் சிபிஎம் ஊழி யர்களின் வீடுகளுக்கு மின்சாரம் செல்லும் மின் கம்பியை அறுத்து விட்டு சென்றனர் பாஜக வினர்.
* சோனமுராவில் உள்ள தோழர் பிஜூஷ் தேப்நாத் தின் வீடும், கால்ஷிமுராவில் உள்ள தோழர் பராத் மியாவின் தையல் கடையும் பாஜக குண்டர்களால் சேதப்படுத்தப்பட்டன.
* பிரதாப்கரில் பாஜகவின் இருசக்கர வாகன கும்பல் களால் அரசியல் வன்முறை மீண்டும் வந்துள் ளது. அந்த பகுதியில் பல தாக்குதல்களுக்கு தலைமை தாங்கி, இடதுசாரி செயல்பாட்டா ளர்களின் உயிருக்கும் சொத்துக்களுக்கும் அச்சு றுத்தல் உள்ளது.
* கயர்பூரில் உள்ள ஆர்கே நகரின் சிபிஎம் ஊழி யரின் வீடு அடித்து நொறுக்கப்பட்டது. சிபிஎம் ஊழியருக்கு அரிவாள் வெட்டு நோகான் பகுதியில் சிபிஐ(எம்) ஊழியரை பாஜக குண்டர் கும்பல் அரிவாளால் வெட்டிய நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கவலைக்கிட மான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி யுள்ளது.
பெண்ணின் கையை உடைத்த பாஜக குண்டர்கள்
பிரதாப்கரில் உள்ள சிபிஎம் ஊழியரின் வீடு புகுந்து பாஜக குண்டர்கள் தாக்குதல் நடத்தினர். வீட்டில் இருந்த சிபிஎம் ஊழியரின் சகோதரி மீதும் ஈவிரக்க மின்றி தாக்குதல் நடத்தி அப்பெண்ணின் கையை அடித்து உடைத்தனர். எலும்பு முறிந்த கையோடு உயிருக்கு பயந்து மேற்கு அகர்தலா மகளிர் காவல் நிலையத்திற்கு ஓடினார்.
திரிபுரா மாநிலக்குழு கண்டனம்
திரிபுராவில் சிபிஎம் ஊழியர்களின் மீதான தாக்கு தல் மற்றும் வன்முறை வெறியாட்டங்களை வன்மை யாக கண்டிக்கிறோம். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை உடனடியாக மீட்டெடுக்க வேண்டும் என இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) திரிபுரா மாநிலக் குழு அறிக்கையில் கூறியுள்ளது.