tamilnadu

img

கடன் வசூலிப்பது என்ற பெயரில் கொடூரம்: சிபிஎம் ஆர்ப்பாட்டம்

கோவை, நவ.28- கடன் வசூலிப்பது என்கிற பெய ரில் கொடூரத்தை அரங்கேற்றிய தனி யார் வங்கி நிர்வாகத்தை கண்டித்தும், சர்பாசி சட்ட விவகாரத்தில், ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். “அடாவடி கடன் வசூல் மூலம் சிறு  தொழில் முனைவோரை வதைப்பதை கண்டித்தும், Dromos Shafts நிறுவ னத்திற்கு நியாயம் வழங்கிட வேண்டும், சர்பாசி சட்டத்திற்கு கண்டனம் தெரி வித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மார்க்சிஸ்ட் கட்சி யின் கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன் தலைமை ஏற்றார். சிபிஎம் கோவை மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன் முன்னிலை வகித்தார். இதில், கோயம்புத்தூர் கம்பரசர் உற் பத்தியாளர் அசோசியேசன் தலைவர் ரவீந்திரன், கோயம்புத்தூர் எம்எஸ் எம்இ அசோசியோசன் தலைவர் தி. மணி, செயலாளர் கே.பாண்டியன், டேக்ட் நிர்வாகி ரவிக்குமார் உள்ளிட்டோர் பங் கேற்று உரையாற்றினர்.   இதனைத்தொடர்ந்து, செய்தியா ளர்களிடம் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பேசுகை யில், சிறு குறு தொழில் முனைவோர் களை பாதுகாப்பது என்பது மாநில அர சுக்கும் ஒன்றிய அரசிற்கும் பொதுவான ஒன்று. சிறு குறு தொழில் முனைவோர் களிடம் அமைச்சர் உட்பட பலரும் பேச்சு வார்த்தை நடத்தி வரும் நிலையில், தனியார் வங்கிகள், கொடுத்திருக்கக் கூடிய கடனை வசூலிப்பது என்ற பெய ரில் கொடூரமான முறையில் நடந்து கொள்கின்றனர். அண்மையில் சர்பாசி சட்டத்தின் கீழ் கோவையில் உள்ள தொழில் முனைவோர் ஒருவரின் சொத் துக்களை முடக்கியுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்கின்ற பொழுது, தனியார்  நிறுவனங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என்று மாவட்ட ஆட்சி யர் கூறுகிறார். இது நியாமான பதில் இல்லை. மேலும் சர்பாசி சட்டத்தின் கீழ்  காவல்துறை பாதுகாப்பு நடவடிக்கை களுக்கு செல்வது என்றால் மாவட்ட ஆட்சியருக்கு தெரியாமல் அது நடக் காது. சிறு குறு தொழில்களை பாது காப்பதற்கு பதிலாக, அதனை ஆட்சி யர் அழிக்கின்ற நடவடிக்கையாக இருக் கும். ஆட்சியர் தனியார் வங்கி நிறுவ னங்களுடன் நிற்பதற்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கி றேன். மேலும் ஏலம் எடுப்பவர்கள் கள் ளக் கூட்டு என்கின்ற வகையில் மிக வேக மாக செயல்பட்டு வருகின்றனர். எனவே ஒன்றிய அரசு இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவையில் பாதிக்கப்பட்டுள்ள தொழில் முனைவோ ரின் வீட்டை திறந்து அவரை குடியேற் றம் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும், என்றார்.