திருவண்ணாமலை, பிப்.18- திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட அரியானா மாநிலத்தைச் சேர்ந்த இருவர் வேலூர் மத்திய சிறை யில் அடைக்கப்பட்டனர். திருவண்ணாமலை, போளூர் மற்றும் கலசப்பாக்கம் பகுதிகளில் செயல்பட்டு வந்த 4 ஏடிஎம் மையங்க ளில், கடந்த 12ஆம் தேதி கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. இதுதொடர் பான புகாரின் பேரில், காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்து, 9 தனிப்படைகள் அமைத்து கொள்ளை யர்களை தேடி வந்தனர். இதில் கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் உள்ள விடுதியில் கொள்ளையர்கள் தங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, பெங்களூருவில் இருந்து அரியானாவுக்கு விமானம் மூலம் தப்பித்துச் சென்ற கொள்ளை கும்பலைப் பிடிக்க, காவல் கண்கா ணிப்பாளர் கார்த்திகேயன் தலைமை யில் காவல் துறையினர் அரியானா வுக்கு சென்று முகமது ஆரிப் (35), ஆசாத் (37) ஆகியோரை கைது செய்து திருவண்ணாமலைக்கு அழைத்து வந்தனர். பின்னர், இருவரும் சனிக்கிழமை (பிப். 18) திருவண்ணாமலை ஒருங்கி ணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் நீதித்துறை முதலாவது நடு வர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட னர். இருவரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் மார்ச் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி கவியர சன் உத்தரவிட்டார். இதையடுத்து இரு வரும் வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.