tamilnadu

img

விரைவில் மாநிலம் முழுவதும் காலை உணவுத் திட்டம்

வேலூர்,பிப்.1- கள ஆய்வில் முதல மைச்சர் திட்டத்தின் கீழ்  புதனன்று (பிப்.1) வேலூருக்கு வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமார வேல்பாண்டியன் தலை மையில் நடந்த விழாவில் குழந்தை நேய பள்ளி உட் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தை  புதன்கிழமை (பிப்.1) தொடங்கி வைத்தார். பேராசிரியர் அன்பழகன்  பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்  துறை மூலம் தமிழ்நாடு முழு வதும் ரூ. 784 கோடியில் 5351 புதிய பள்ளி வகுப்பறைக் கட்டடங்கள் இந்த திட்டம் மூலம் கட்டப்படும். மேலும், 7 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 55 தொடக்க மற்றும்  நடுநிலைப் பள்ளிகளில் ரூ.15.96 கோடியில் கட்டப் படவுள்ள 114 வகுப்பறைக் கட்டடங்களுக்கு அவர்  அடிக்கல் நாட்டினார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வரவேற்று பேசினார். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி, உயர்கல்வி துறை அமைச்சர் க.பொன்முடி முன்னிலை வகித்தனர். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்  பொய்யாமொழி நன்றி கூறினார்.

அதன் பிறகு, திரு வண்ணாமலை, திருப் பத்தூர், ராணிப்பேட்டை, கடலூர், செங்கல்பட்டு, திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், கரூர், புதுகோட்டை, மதுரை ஆகிய 11 மாவட்ட  ஆட்சியர்களுடன் காணொளி வாயிலாக  முதல்வர் கலந்துரையாடி னார். பின்னர், வேலூர் விஐடி  பல்கலைக் கழகம் அண்ணா  அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர், புதிய கட்டிடங் களை திறந்துவைத்தார். பின்னர், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காணொளி கூட்டரங்கில் தோல் தொழிலதிபர்கள், விவசாயிகள், வணிகர்கள்,  பேருந்து, லாரி உரிமை யாளர்களை சந்தித்து  அவர்களின் கோரிக்கை கள் குறித்து கலந்துரையாடி னார். அதனைத் தொடர்ந்து, முதல்வர் தலைமையில் வேலூர் சரக மாவட்டங் களில் சட்டம்- ஒழுங்கு ஆய்வு நடைபெற்றது. இரவு வேலூரில் தங்கும்  முதல்வர், வியாழக்கிழமை (பிப்.2) காலையில் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப் பேட்டை மாவட்ட ஆட்சியர்க ளுடன் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசின் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்கிறார். இதில், அமைச்சர்கள் மற்றும் அரசு துறை செயலாளர்கள் பங்கேற்கின்றனர். ஆய்வுக்கூட்டம் முடிந்த தும் திமுக பொதுச் செயலா ளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரை முருகன் வீட்டுக்குச் செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரயில்  மூலம் சென்னை திரும்பு கிறார்.