திருப்பூர், டிச. 29 - வகுப்புவாதத்தை முறியடிக்க வர்க்க வாதமே சிறந்த வழி என்பதை விவசாயிகளின் வெற்றிகரமான போராட்டம் நிரூபித்துள்ளது. அதன் படி இந்த தேசத்தைக் காக்க அறச்சீற்றத்தோடு கிளர்ந்தெழு வோம் என்று சிஐடியு மாநிலத் தலை வர் அ.சவுந்தரராசன் கூறினார். திருப்பூர் கே.ஆர்.சி. சிட்டி சென்ட ரில் செவ்வாயன்று மாலை பொதுத் துறைகளைப் பாதுகாப்போம், தேசத்தைப் பாதுகாப்போம் என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட சிஐடியு, மத்திய, மாநில அரசு ஊழியர், ஆசிரி யர், பொதுத்துறை மற்றும் ஓய்வூதி யர் கூட்டமைப்பு சார்பில் நடை பெற்ற இந்த கருத்தரங்குக்கு அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்க திருப்பூர் மண்டலப் பொதுச் செய லாளர் பி.செல்லதுரை தலைமை ஏற்றார்.
இந்த கருத்தரங்கில் பேசிய அ.சவுந்தரராசன், கடந்த 1990ஆம் ஆண்டுக்குப்பிறகு 21 ஆவது முறையாக பிப்ரவரி 23, 24 தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. பொதுத்துறையைப் பாதுகாப்பது என்பது இந்த தேசத்தைப் பாது காக்கும் போராட்டமாகும் என்றார். மேலும் அவர் பேசுகையில், வகுப்புவாதத்தைக் தூண்டிவிட்டு மக்களைப் பிளவுபடுத்தி உ.பி. மாநிலத்தில் பாஜக வெற்றி பெற காரணமாக இருந்த அதே முசாபர் நகரில் 10 லட்சம் விவசாயிகள் திரண்டு மாபெரும் போராட்டத்தை நடத்தினர். இந்து, முஸ்லிம், சீக்கியர் என மதங்களைக் கடந்து பெண்கள், தலித்துகளும் உள்பட விவசாய மக்கள் இணைந்து நடத்திய மகத்தான போராட்டம் காரணமாக கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான விவசாயிகள் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. வகுப்பு வாத த்தை வர்க்க வாதம் முறியடித்தது. பொதுத்துறை என்பது லாப நட்டக் கணக்குப் பார்க்கும் தொழில் அல்ல. இதனால் சமுதாயத்தில் பெண்கள், நலிவடைந்த பிரிவினர், ஒடுக்கப்பட்டவர்கள் பெற்ற முன்னே ற்றம் அளப்பரியது. எனவே பொதுத் துறைகளைப் பாதுகாக்க நடக்கும் போராட்டம் தேசத்தைக் காக்க நடக்கும் போராட்டமாகும். இதில் அறச்சீற்றத்துடன் தொழிலாளி வர்க்கத்துடன், அனைத்து தரப்பு உழைக்கும் மக்களும் ஆர்த்தெழு வோம், என்றார்.
இந்த கருத்தரங்கில் பேசிய எல்ஐசி தென் மண்டல ஊழியர் சங்கத் துணைத் தலைவர் க.சுவாமிநாதன், பொதுத்துறை பாதுகாப்பு என்பது ஏதோ சில நிறுவனங்களைப் பாது காக்கும் விசயம் என்று நினைக்கக் கூடாது. தேசத்தின் இறையாண்மை, சுயசார்பு, மக்கள் நலத் திட்டங்கள், சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றைப் பாதுகாக்கும் செயல் ஆகும் என்றார். கருத்தரங்கில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்க நிர்வாகி பி.கல்யாண ராமன் வரவேற்றார். சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் எம்.சந்திரன், மாவட்டத் தலைவர் கே.உண்ணி கிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், அனைத்து சங்கங் களின் நிர்வாகிகள் கே.எல்லம் மாள், பி.பாக்கியம், எம்.பாலசுப்பிர மணி, டி.பிரபு செபாஸ்டியன், என். வெங்கடேஷ், எஸ்.நவீன், ராம சுப்பிரமணியம், பா.சௌந்தர பாண்டியன், ஏ.ரமேஷ், எம்.நாட்ராயன், க.சண்முகம், என்.கருப்புசாமி உள்பட அனைத்து சங்கங்களைச் சேர்ந்தவர்கள் பெருந் திரளாக கலந்து கொண்டனர். மின் ஊழியர் மத்திய அமைப்பின் செய லாளர் க.நாகராஜ் நன்றி கூறினார்.