சென்னை,பிப்.24- சென்னை தலைமைச் செய லகத்தில் பிப்ரவரி 23 அன்று தமிழ் நாடு அரசின் பட்ஜெட் தயாரிப்புக் காக நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநிலப் பொதுச்செயலாளர் டி. ரவீந்திரன் கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் கடந்த பத்து ஆண்டுகளில் தமிழகத்தில் கரும்பு சாகுபடியும், சர்க்கரை உற்பத்தியும் வெகுவாக குறைந்துவிட்டது. 2012-13 இல் 23 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்ட தமிழகத்தில் 2020-21 இல் 8.75 லட்சம் டன்களாக சர்க்கரை உற்பத்தி வீழ்ச்சி அடைந்துவிட்டது. வறட்சி என்பது ஒரு காரணமாக இருந்தாலும் தனியார் சர்க்கரை ஆலைகள் மாநில அரசு அறிவித்த கரும்புக்கான பரிந்துரை விலையை 2013-14 முதல் 2016-17 வரை விவசாயி களுக்கு தராததும், 2017-18 இல் இருந்து மாநில அரசு கரும்புக்கு விலையை (State Advised Price) அறிவித்து வழங்காததும், கடந்த நான்கு ஆண்டுகளாக கரும்புக்கு விலை உயர்த்தப்படாததும் தான் தமிழகத்தில் கரும்பு சாகுபடி பரப்பு குறைந்து,
சர்க்கரை உற்பத்தி வீழ்ச்சி அடைந்ததற்கு பிரதானமான காரணமாக கருதுகிறோம். இந்த அனுபவத்தில் இருந்து கரும்பு விவ சாயிகளின் நலன்களை பாது காத்திட, சர்க்கரை துறையை மேம் படுத்திட கீழ்க்கண்ட கோரிக்கை களை கவனத்திற்கு கொண்டு வரு கிறோம்.
இந்தியாவில் கரும்பு சாகுபடி அதிகமாக நடைபெறும் மாநிலங்க ளில் மாநில அரசுகள் இப்போது வரை கரும்புக்கு பரிந்துரை விலையை (State Advised Price) அறிவித்து வழங்கி வருகிறார்கள். தமிழ்நாட்டில் 30 ஆண்டுகளாக அமலில் இருந்து எஸ்.ஏ.பி அறிவித்து வழங்கும் நடைமுறையை கடந்த ஆட்சியில் 2018ல் கைவிட்டுவிட்டனர். இந்த நிலைமையை மாற்றிட 2018 இல் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற் றப்பட்ட வருவாய் பங்கீட்டு முறை சட்டத்தை ரத்து செய்துவிட்டு, மாநில அரசு கரும்புக்கான பரிந் துரை விலையை (State Advised Price) 2021-22 முதல் அறிவித்து வழங்கிட வேண்டும். தனியார் சர்க்கரை ஆலைகள் யுஆர்சி (URC) என்கிற பெயரில் கூட்டுறவு ஆலைகளின் கரும்பு விவகார எல்லையில் உள்ள கரும்பை வாங்கி அரைக்கும் கரும்பில் 10.5 சதவீதம் வரை ரெக்கவரி வருகிறது. ஆனால் அதே கரும்பை நமது கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரைக்கும் போது 8.2 சதவீதம் என்ற அளவிலேயே பிழிதிறன் வருகிறது.
இதற்கு அடிப்ப டையான காரணம் கூட்டுறவு ஆலைகள் நவீனப்படுத்தப்படா ததுதான். எனவே, மாநிலத்தில் உள்ள கூட்டுறவு - பொதுத்துறை சர்க்கரை ஆலைகளை புனரமைத்து மேம்படுத்திட வேண்டும். கூட்டுறவு - பொதுத்துறை சர்க்கரை ஆலை களில் தேவையான எண்ணிக்கை யில் திறமை வாய்ந்த தொழிலாளர் கள் மற்றும் ஊழியர்களை பணியில் அமர்த்திட வேண்டும். மூடியுள்ள மதுரை தேசிய கூட்டு றவு ஆலை, ஆம்பூர் கூட்டுறவு ஆலை, என்.பி.கே.ஆர் கூட்டுறவு ஆலைகளை புனரமைத்து திறந்து கரும்பு அரவை செய்திட நடவ டிக்கை எடுத்திட வேண்டும்.
ஆலை புனரமைப்பு மற்றும் செயல்பட தேவையான நிதியை வழங்கி உதவிட வேண்டும். கூட்டுறவு - பொதுத்துறை சர்க்க ரை ஆலைகளைப் பாதுகாத்து மேம்படுத்திட கரும்பு மேம்பாட்டு நிதியிலிருந்து இந்திய ஒன்றிய அரசிடம் தமிழகத்திற்கான பங்கை கேட்டுப் பெற வேண்டுகிறோம். அம்பிகா, ஆரூரான், தரணி ஆகிய ஏழு தனியார் சர்க்கரை ஆலை கள் தேசிய கடன் தீர்ப்பாயத்திற்கு சென்றுவிட்ட நிலையில் இந்த ஆலை கள் விவசாயிகளுக்கு தர வேண்டிய கரும்பு நிலுவைத்தொகை சுமார் 800 கோடியை பெற்றுத்தர மாநில அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டுகிறோம். தமிழகத்தில் 24 தனியார் சர்க்கரை ஆலைகள் 2013-14 முதல் 2016-17 வரை நான்கு ஆண்டு காலத் திற்கு விவசாயிகளுக்கு தர வேண்டிய மாநில அரசின் பரிந்துரை விலை ரூ.1217 கோடியை மாநில அரசு பெற்றுத்தர வேண்டும். மாநில அரசு அறிவித்தி டும் எஸ்.ஏ.பியையும் தருவதாகவும் ஒப்புக் கொண்டு உரிமம் பெற்றுள்ள ஆறு தனியார் சர்க்கரை ஆலைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து எஸ்.ஏ.பி பாக்கியை பெற்றுத்தர வேண் டுகிறோம். ஒரு டன் கரும்புக்கு ரூ.4000 வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.