tamilnadu

img

அசோக் நினைவு நாள் ரத்ததான முகாம்

தஞ்சாவூர், ஜூன் 12- பட்டுக்கோட்டை அந்தோணியார்கோ யில் தெரு, இரணியன் நினைவரங்கில் வெள்ளிக்கிழமை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், தோழர் அசோக் நினைவு ரத்ததான முகாம், நடைபெற்றது. வாலிபர் சங்க ஒன்றியத் தலைவர் மோரீஸ் அண்ணாதுரை தலைமை வகித்தார். செயலாளர் குட்டி என்ற சுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தார். வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஆம்பல் துரை.ஏசுராஜா கலந்து கொண்டார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி முகாமை தொடங்கி வைத்தார்.  பட்டுக்கோட்டை அரசு மருத்துவர் டாக்டர் நியூட்டன், ரத்த வங்கி பொறுப்பாளர் கலையர சன், வாலிபர் சங்க ஒரத்தநாடு ஒன்றிய துணைச் செயலாளர் பாஸ்கரன், ஒன்றியக் குழு உறுப்பினர் திங்கள் கண்ணன், ராஜா, சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர் முருக.சரவணன் கலந்து கொண்டனர்.