tamilnadu

img

அருந்ததியர் உள்ஒதுக்கீட்டை அதிகரிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

மதுரை:
அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை ஆறுசதவீதமாக அதிகரிக்க வேண்டும். கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்துள்ள பறைஇசைக் கலைஞர்கள் உள்ளிட்ட அனைத்துகிராமியக் கலைஞர்களுக்கு ஏப்ரல் மாதத்திலிருந்து தற்போது வரை மாதம் ரூ .5ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டுமென் பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆதித்தமிழர் கட்சி சார்பில் மதுரையில் பறைமுழக்கப் போராட்டம் நடைபெற்றது, கட்சித் தலைவர் கு.ஜக்கையன், மாநகர் மாவட்டச் செயலாளர் சுப்பிரமணி மற்றும் புறநகர் மாவட்டச் செயலாளர் முருகன், விடுதலை வீரன் விடுதலை குமார், முனியாண்டி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

விருதுநகர்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தல் நடைபெற்ற போராட் டத்திற்கு மாவட்டத் தலைவர் சீ.சுந்தரரான், மாவட்டச் செயலாளர் விருதை வசந்தன், மாவட்ட நிர்வாகிகள் வேல்முருகன்,ராஜ், செல்வி ஆகியோர் கலந்துகொண்டனர்.

;