tamilnadu

img

இதயத்துடிப்பை கண்டறிய உதவும் செயற்கை நுண்ணறிவு - சிதம்பரம் இரவிச்சந்திரன்

மருத்துவமனை அல்லது பொது மருத்து வரின் அறுவைசிகிச்சை கூடத்திற்கு சென்று  மருத்துவரின் ஸ்டெதாஸ்கோப் கருவியின்  உதவியில்லாமல் ஒருவரின் இதயத்துடிப்பை அள விட உதவும் லேசர் கேமராவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயல்படும் இந்த லேசர் கருவி இதயத்துடிப்பை தொண்டை வழியாக அளவிடுகிறது. இந்த கருவி இப்போது உலகம் முழுவதும் நடைமுறையில் இருக்கும் ஸ்டெதாஸ்கோப்பிற்கு மாற்றாக விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று நம்பப்படுகிறது.

வீட்டில் இருந்தபடியே

வீட்டில் வைத்து இந்தக் கருவியை பயன்படுத்த லாம். நம் உடல் நலத்தை நாமே அறிய உதவும் இந்த  புதிய கண்டுபிடிப்பு மருத்துவத்துறையில் பெரிய  மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கிளாஸ்கோ பல்க லைக்கழகஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த கேமராவை ஒரு குறிப்பிட்ட தொலைவில் இருந்து  இயக்கலாம். இதன் மூலம் ஒருவருக்கு ஏற் ட்டுள்ள இதயநோய்களை அறியமுடியும். இது  செயற்கை நுண்ணறிவு மற்றும் குவாண்டம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செயல்படு கிறது. “பூத்துகள், வணிக வளாகங்களில் மக்கள்  குறைந்த நேரத்தில் தங்கள் இதயத்துடிப்பை அளவிட இந்த லேசர் கேமராவை பயன்படுத்த லாம். இதயத்துடிப்பு அளவிடப்பட்ட பிறகு அதை  அவரவர் தங்கள் நிகழ்நிலை அல்லது ஆன்லைன்  மருத்துவ ஆவணங்களுடன் சேர்த்துக்கொள்ள முடியும்” என்று கிளாஸ்கோ பல்கலைக்கழக அதி நவீன ஆய்வுப்பிரிவு நிபுணர் பேராசிரியர் டேனி யல் இ ஃபாக்ஸியோ (Daniel e Faccio) கூறு கிறார்.

மற்ற பரிசோதனைகளுக்கும்

இந்த லேசர் கண்காணிப்பு கருவியை ஒருவ ரின் வீட்டில் பல்வேறு மருத்துவ கூறுகளை கண்காணிக்கவும் பயன்படுத்தலாம். இதனுடன் பொருத்தப்பட்டுள்ள மற்ற கருவி கள் மூலம் இரத்த அழுத்தத்தில் உருவாகும் அசாதாரணமான மாற்றங்கள், அல்சைமர்ஸ் (Alzheimer’s) நோய் தோன்றுவதற்கு முன்பு  ஏற்படும் அறிகுறி போன்றவற்றை அறியலாம். ஒரு குறிப்பிட்ட தூரத்தில் இருந்து அளவிடுவ தால் ஒருவரின் இதயத்துடிப்பில் ஏற்படும் வேகமான அல்லது மெதுவான துடிப்புகள் போன்ற  ஒழுங்கற்ற இதய செயல்பாடுகளை கண்டறி யலாம். பக்கவாதம் அல்லது மாரடைப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது என்பதை எச்சரிக்க இந்த லேசர்  கேமரா உதவுகிறது.  மருத்துவர்கள் இப்போது இதயத்துடிப்பை அளவிட ஸ்டெதாஸ்கோப்பையே பயன்படுத்து கின்றனர். 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரெஞ்சு அறுவைசிகிச்சை நிபுணர் ரினே லவனெக் (René Laënnec) தன்னைக் காணவந்த ஒரு பெண் நோயாளியின் நெஞ்சில் காதை வைத்துக் கேட்பதைத் தவிர்க்க இந்த கருவியை கண்டுபிடித்து முதல்முதலாக பயன்படுத்தினார். ஒரு ஸ்டெதாஸ்கோப்பில் வட்ட வடிவமான ஒரு எதிரொலிக்கும் கருவி உள்ளது. ஒருவரின்  உடலில் வைக்கப்படும்போது இது உடலுக்குள்  உருவாகும் ஓசைகளை கேட்க உதவுகிறது. இந்த  ஓசைகள் ஒலி பெருக்கம் செய்யப்பட்டு குழல்கள் மற்றும் காதுவைத்து கேட்கும் பகுதியின் வழியாக  கேட்பவருக்கு அனுப்பப்படுகிறது. இதை பயன் படுத்த முறையான பயிற்சி அவசியம். ஸ்டெதாஸ்கோப்பை நோயாளியின் மார்பில் அழுத்தி வைத்தால் அது இதயத்துடிப்புகளை பாதிக்கும். அதே நேரம் பின்புலத்தில் ஒலிக்கும்  லேசான முதன்மை இதயத்துடிப்புகளுடன் சேர்ந்து  ஒலிக்கும் முணுமுணுப்புகள் போன்ற மெல்லிய ஒலிகளைக் கேட்பது கடினம். இந்த மெல்லிய ஒலிகளே ஒருவரின் இதயத்தில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை அறிய உதவும் முக்கிய அறிகுறி.

தொண்டையில் ஒளியை விழச்செய்து...

ஸ்டெதாஸ்கோப்பிற்கு மாற்றாக பயன்படக்  கூடிய இந்த புதிய கருவியில் ஒரு விநாடிக்கு 2,000 பிரேம்கள் என்ற வேகத்தில் படங்களை பதிவு செய்யும் உயர் வேக கேமராக்கள் உள்ளன.  ஒரு லேசர் கற்றை ஒருவரின் தொண்டையில் விழு மாறு செய்யப்படுகிறது. ஒளிரச் செய்யப்படுகிறது. அப்போது ஏற்படும் பிரதிபலிப்புகள் இரத்தம் அவ ருடைய இதயக்குழாய் வழியாக ஓடும்போது உருவாகும் சுருங்கி விரியும் இரத்தக்குழாயின் இயக்கம் மூலம் அவருடைய தோல் மேலெழும்பி  தாழும்போது ஏற்படும் அசைவுகளின் உதவி யுடன் துடிப்புகள் துல்லியமாக அளவிடப்படு கிறது.

உதவிக்கு வரும் செயற்கை நுண்ணறிவு

ஒரு மீட்டரில் ஒரு சில பில்லியனில் ஏற்படும்  மாற்றங்களே இவை. இந்த அளவிற்கு கூர்மை யாக செயல்பட்டாலும் இத்தகைய லேசான ஏற்றத்தாழ்வுகள் இதயத்துடிப்பை துல்லியமாக கண்டறிய போதுமானதில்லை. ஒருவரின் மார்புப் பகுதியில் இது தவிர சுவாசித்தல் போன்ற வேறு பல பெரிய அசைவுகள் ஏற்படுகின்றன. இந்த அசைவுகள் இதயத்துடிப்பின் சமிக்ஞைகளின் துல்லியத்தன்மையை பாதிக்கும். இந்த குறை பாட்டை போக்க செயற்கை நுண்ணறிவு உதவு கிறது. அதி நவீன கணினித்தொகுப்பு செயல்முறை யைப் பயன்படுத்தி ஒருவரின் இதயத்துடிப்பினால் உருவாகும் அதிர்வுகளைத் தவிர மற்ற எல்லா ஒலிகளும் வடிகட்டப்படுகின்றன. இதயத்துடிப்பு ஒருவரின் மார்புப்பகுதியில் இருந்து வெளிப்படும் மற்ற ஒலிகளை விட பலவீனமானது என்றாலும் செயற்கை நுண்ணறிவு இந்த குறைபாட்டை அகற்ற பயன்படுகிறது. “ஒரு மனிதனின் இதயத்துடிப்பு ஒலியின் அலை நீளம் என்ன என்பது மருத்துவர்களுக்கு தெரியும்.

இதய நலம் காக்கும் தொழில்நுட்பம்

செயற்கை நுண்ணறிவு இதற்கே முக்கியத்து வம் கொடுத்து இயங்குகிறது. இதன் மூலம்  இதயத்துடிப்பின் அளவில் ஏற்படும் மாற்றங்களின் பகுப்பாய்வை மருத்துவ ஊழியர்கள் அறிந்து கொள்ள முடிகிறது. குறிப்பிட்ட தனிநபர் ஒருவரின்  இதயம் செயல்படும் முறையை இதனால் தெரிந்து கொள்ளமுடியும். இது இந்த தொழில்நுட்பத்தை மகத்தானதாக்குகிறது. இதன் மூலம் ஒருவரின் இதயத்தில் தோன்றக்கூடிய கோளாறுகளைப் பற்றி முன்கூட்டியே துல்லியமாக தெரிந்துகொள்ள முடியும்” என்று ஃபாக்ஸியோ கூறுகிறார்.

கூட்டத்தில் இருந்தாலும் 

இந்த தொழில்நுட்பத்தை பரவலாக பயன் பட்டிற்குக் கொண்டுவர ஆய்வுக்குழுவினர் “லேசான இதயத்திற்கான செயற்கை நுண்ணறிவு”  (LightHearted AI) என்ற பெயரில் புதிய ஸ்டார்ட் அப் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர். பத்து பேர் உள்ள ஒரு வீட்டில் இருக்கும்போது கூட ஒரு  லேசர் கற்றையை ஒருவருடைய தொண்டையில் விழச்செய்து அதனால் ஏற்படும் பிரதிபலிப்பைப் பயன்படுத்தி அவருடைய இதயத்துடிப்பை துல்லி யமாகக் கண்டறியமுடியும். செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் செயல்  படும் இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு வரை உயிரிய முறையில் அடையாளம் (biometric identification) காணலாம். மருத்துவ மனைகளுக்கும் பொது மருத்துவரின் அறை களுக்கும் செல்லாமல் வெளியில் இருந்தபடியே ஒருவர் தன் இதயத்துடிப்பை சுலபமாக கண்டறி வது விரைவில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதே இந்த லேசர் கேமரா கருவியின் முக்கியப்பயன். இந்த கண்டுபிடிப்பு ஆரோக்கியத் துறையில் ஒரு திருப்புமுனையாக அமையும் என்று நம்பப்படுகிறது.