அரியலூர் : எள் வயலில் தேங்கிய மழைநீர்
300 ஏக்கர் நாசமானது
அரியலூர், மே 20- அரியலூர் மாவட்டத்தின் டெல்டா பகுதியான திருமானூரில் சம்பா சாகுபடி அறுவடை பணிகள் முடிவடைந்த நிலையில், எண்ணெய் வித்து பயிரான எள் பயிரை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். திருமானூர் ஒன்றியத்தில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் எள் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நல்ல விளைச்சலுடன் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள போது, கடந்த 3 நாட்களாக திருமானூர் பகுதியில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதி களில் உள்ள 300 ஏக்கர் பரப்பள விலான எள் வயல்களில் மழை நீர் தேங்கி உள்ளது. மேலும் நீர் தொடர்ந்து தேங்கி இருப்பதால் எள் பயிர்கள் அழுகியும் வருகிறது. எள் அறுவடை செய்துள்ள விவ சாயிகள் எள் பயிரை உலர்த்த முடியாமல் உள்ளதால் கைக்கு வந்த மகசூல் காசாக்க முடியாமல் விவ சாயிகள் தவித்து வருகின்றனர். மேலும் தொடர்ந்து இரவு நேரங் களில் மழை பெய்து வருவ தால் தேங்கிய நீரும் வடியாமல் வயலிலேயே தேங்கி காணப்படு கிறது. இதனால், எள் மகசூல் முற்றி லும் பாதிக்கப்படும் சூழலும் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஒரு ஏக்கர் சாகுபடி செய்ய சுமார் ரூ.15,000 வரை செலவு செய்துள்ள நிலையில், விவசாயி களின் வாழ்வாதாரத்தை பாது காக்கும் வகையில் மாவட்ட வேளாண்மை துறை, பாதிக்கப்பட்ட எள் வயல்களை அளவீடு செய்து உரிய நிவாரணம் வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என வும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.