தென்காசி, மார்ச் 13 தென்காசி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் பிரதான அருவியான குற்றால மெயின் அருவி, சிற்றருவி, புலியருவி நீரின்றி வறண்டு காணப்படுகிறது. இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். ஐந்தருவியில் பாறையை ஒட்டியபடி சிறிதளவு நீர் இரண்டு கிளைகளில் வருவதால் அதில் சுற்றுலாப் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து அருவி யில் குளித்தனர். கோடை வெப்பத்தைத் தணிக்க அருவியில் குளிக்க ஆவலுடன் வந்த சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் தண்ணீர் இல்லாததை கண்டு பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.