tamilnadu

img

நிலச்சீர்திருத்தத்தின் சிற்பி- பினாய் சவுத்ரி

நிலச்சீர்திருத்தத்தின் சிற்பி- பினாய் சவுத்ரி

மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியின் மத்தி யக் குழுவுக்கும் அர சியல் தலைமைக் குழுவுக்கும் தேர்வு செய்யப்பட்ட தோழர் பினாய் கிருஷ்ண சவுத்ரி அவர்கள்1911ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் தேதி மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்தார். மேற்கு வங்கத்தில் தோன்றிய மிகச்சிறந்த புரட்சியாளர்களில் ஒருவர் பினாய் சவுத்ரி.  மகாராஜாவை தோற்கடித்த மக்கள் ஊழியர் தனது பள்ளி பருவத்திலேயே ஜுகாந்தர் எனும் புரட்சிகர அமைப்பில் இணைந்தார். ஒத்துழையாமை இயக் கத்தில் பங்கேற்றதற்காக தனது 19ஆவது வயதில் 1930ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். மீண்டும் பீர்பும் சதி வழக்கில் 1933இல் கைது செய் யப்பட்டு 5 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் கம்யூ னிஸ்டுகளுடன் தொடர்பு உருவானது. 1938இல் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். தேபாகா விவசாயிகள் மகத்தான போராட்டத்தில் முதன்மைப் பங்கை வகித்தார். இரண்டாம் உல கப்போர் தொடங்கிய சமயத்தில் பிரிட்டிஷ் நிர்வாகத்தால் பர்துவான் மாவட்டத் திற்குள் நுழையக் கூடாது என தடை விதிக்கப்பட்டார். எனவே 1942 வரை தலைமறைவு வாழ்வில் இருந்தார். பின்னர் கட்சி மீது தடை நீக்கப்பட்ட பொழுது பகிரங்கப் பணியில் ஈடுபட்டார். மீண்டும் கட்சி 1948இல் தடை செய்யப் பட்ட பொழுது தலைமறைவு வாழ்வில் சென்றார்.  1952ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் தேர்தலில் பர்துவான் தொகு தியிலிருந்து பர்துவான் மகாராஜாவை தோற்கடித்து வெற்றி பெற்றார்.

ஒன்று பட்ட கட்சியில் பர்துவான மாவட்டக் குழுச் செயலாளராக 1939 முதல் 1949 வரை செயல்பட்டார். 1951ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநிலக் குழுவுக்கும் 1962ஆம் ஆண்டு மாநில செயற்குழுவுக்கும் தேர்வு செய்யப்பட்டார். வலதுசாரி திரிபுக்கு எதிராக கடுமையாகப் போரிட்ட தோழர் பினாய் அவர்கள் சிபிஐ(எம்) உதயமான பொழுது அதில் தன்னை இணைத்து கொண்டார். பின்னர் இடது சீர்குலைவுவாதத்துக்கு எதிராகவும் சித்தாந்தப் போராட்டம் தொய்வின்றி நடத்தினார். ஜலந்தரில் 1978ஆம் ஆண்டு நடைபெற்ற 10ஆவது மாநாட் டில் மத்தியக் குழுவுக்கும் 1990ஆம் ஆண்டு அரசியல் தலைமைக் குழு வுக்கும் தேர்வு செய்யப்பட்டார்.  40 லட்சம்  குடும்பங்கள்  பலனடைந்த நிலச்சீர்திருத்தம் பினாய் சவுத்ரி விவசாயிகளின் மகத் தான தலைவர் ஆவார்.

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவராக பல ஆண்டுகள் செயல்பட்டார். 1977 ஆம் ஆண்டு முதல் இடது முன்னணி ஆட்சியில் நிலச்சீர்திருத்த அமைச்சரா கப் பணியாற்றினார். இதே துறையில் அடுத்த 4 இடது முன்னணி அரசாங்கத்தி லும் அமைச்சராகப் பணியாற்றினார். அவரது தலைமையின் கீழ்தான் மேற்கு வங்கத்தில் நிலச்சீர்திருத்தம் அமலாக்கப் பட்டது. 1967ஆம் ஆண்டு ஐக்கிய முன்னணி அரசாங்கம் வடிவமைத்த நிலச்சீர்திருத்த சட்டத்தை பினாய் சவுத்ரி 1978இல் அமலாக்கினார். அந்த சட்டத் தின் பல்வேறு கூறுகளையும் ஆய்வு செய்து நிலப்பிரபுக்கள் நீதிமன்றத்துக்கு சென்று வெற்றி அடைய விடாத வடி வத்தில் அந்த சட்டம் இயற்றப்பட்டது. பின்னர் நிலச்சீர்திருத்தத்தின் இரண்டாவது கட்டமான “ஆபரேஷன் பர்கா” எனும் சீர்திருத்தம் அமலாக்கப் பட்டது.

குத்தகை விவசாயிகள் தாம் உழைக்கும் நிலத்தில் பதிவு செய்யப்படு வதும் அவர்களுக்கு தேவையான நிதி உதவிகளை செய்வதும் என்பதுதான் இந்த சட்டத்தின் நோக்கம் என விளக்கி னார்.  இதற்காக பல்வேறு சட்ட நுணுக் கங்களை கற்று அறிந்தார். அவற்றின் மூலம் நிலச்சீர்திருத்தங்களுக்கு எதிராக நிலப்பிரபுக்கள் நீதிமன்றத்தை நாடாத அளவுக்கும், அவ்வாறு நாடினால் வெற்றி பெற முடியாத அளவுக்கும் சட்டங்களை உருவாக்கினார்.  இவ்வாறு 17 லட்சம் விவசாயிகள் பதியப்பட்டு பலன் அடைந்தனர். மேலும் சுமார் 10 லட்சம் ஏக்கர் நிலம் 24 லட்சம் நிலமற்ற ஏழைகளுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது. இவ்வாறாக 40 லட்சம் கிராமப்புற ஏழைகள் பலன் அடைந்தனர். சிபிஐ(எம்) கொள்கைகள் அடிப்படையில் நிலச்சீர்திருத்தத்தின் தலைமை சிற்பி தோழர் ஜோதிபாசு எனில் அதனை களத்தில் நிறைவேற்றிய சிற்பிகள் ஹரே கிருஷ்ண கோனாரும் பினாய் சவுத்ரியும் ஆவர்.  அதே போல உள்ளாட்சி துறை தேர்தல்களை காலத்தே நடத்துவதும் உள்ளாட்சிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்வதிலும் பினாய் சவுத்ரி மிகுந்த கவனம் செலுத்தினார்.

மாநில அர சாங்கத்தின் பட்ஜெட்டில் 50% உள்ளாட்சி களுக்கு தரப்பட்டது.  உடலும் கண்களும் தானம் மார்க்சிய சித்தாந்தம் மீது ஆழமான நம்பிக்கையும் பற்றும் கொண்ட பினாய் சவுத்ரி அவர்கள் தன் வாழ்நாளில் 12 ஆண்டுகள் சிறையிலும் 10 ஆண்டுகள் தலைமறைவு வாழ்விலும் இருந்தார். எப்பொழுதெல்லாம் தோழர்களிடையே சோர்வு உருவாகிறதோ அப்பொழு தெல்லாம் தோழர் பினாய் சவுத்ரி அவர்க ளை உற்சாகப்படுத்தி கட்சிப்பணிகளில் மீண்டும் ஈடுபட வைப்பார். அந்த அசாத்திய திறமை அவரிடம் இருந்தது.  உடல் நிலை காரணமாக கட்சி  கமிட்டிகளிலிருந்து தன்னை விடுவித்து கொண்ட பினாய் அவர்கள் ஒரு சிறிய வாடகை வீட்டில் தனது மனைவின் ஓய்வூ தியத்தில் இறுதி காலத்தில் வாழ்ந்தார். எனினும் கட்சி நடவடிக்கைகளை கூர்மை யாக கவனித்து வந்தார்.

தனது கருத்துக ளையும் விமர்சனங்களையும் கட்சி தலைமையின் கவனத்துக்கு கொண்டு சென்றார். 6.5.2000 அன்று காலமான இந்த மகத்தான தலைவர் தனது உடலையும் கண்களையும் மருத்துவக் கல்லூரிக்கு தானமாக கொடுத்தார்.