tamilnadu

img

ஏப்ரல் 9 - மாநில உரிமை பாதுகாப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  23வது அகில இந்திய மாநாடு ஏப்ரல் 6 -10 வரை கேரள மாநிலம் கண்ணூரில்  நடைபெறுகிறது. இதையொட்டி கண்ணூரில் பல்வேறு சிறப்புக் கருத்தரங்குகள் நடைபெறு கின்றன. ஏப்ரல் 9 அன்று “மாநில உரிமை பாதுகாப்பு” குறித்த சிறப்புக் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இக்கருத்தரங்கில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்று உரையாற்றுகிறார்.  மாநில உரிமைகளை பாதுகாக்க இடதுசாரிகளும் திராவிட முன்னேற்றக் கழகமும் இணைந்து எழுப்பும் இந்த பெரும் குரல், ஒன்றிய ஆட்சியாளர்களின் செவிகளில் எதிரொலிக்கும் விதத்தில் வலுவான பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்ல தீக்கதிர் நாளேடு முடிவு செய்துள்ளது.  

அந்த அடிப்படையில், ஏப்ரல் 9 அன்று கண்ணூரில் மாநில உரிமை பாதுகாப்பு கருத்தரங்கம் நடைபெறும் அதேநாளில், மாநில உரிமைகள் குறித்த சிறப்புக் கட்டுரைகளுடன் தீக்கதிர் சிறப்பிதழ் வெளியாகிறது. இச்சிறப்பிதழுக்கு சிறப்பு சேர்க்கும் வகையிலும், கண்ணூர் கருத்தரங்கை வாழ்த்தியும் விளம்பரங்கள் அளித்து, இதழை மெருகூட்ட உதவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம். - முதன்மைப் பொது மேலாளர்