tamilnadu

img

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குக

சென்னை,ஏப். 9- மாநில அரசின் பட்ஜெட்டில் அறி விக்கப்பட்டுள் மதுரை, கோவை மெட்ரோ ரயில்  திட்டங்களுக்கு ஒன்றிய  அரசு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என்று  தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை பல்லாவரத்தில் சனிக் கிழமை நடைபெற்ற புதிய ரயில்  திட்டங்கள் தொடக்க விழாவில் அவர் பேசியதாவது:   மாநிலங்களின் மேம்பாட்டுக்குத் தேவையான திட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து நிறைவேற்றி னால்தான், ஒட்டுமொத்த இந்தியா வும் வளம்பெறும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான சாலை கட்டமைப்புத் தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.  குறிப்பாக, சென்னை-மதுரவாயல் உயர்நிலைச் சாலை, சென்னை-தாம் பரம் உயர்நிலைச் சாலை, கிழக்கு கடற்கரைச் சாலையை நான்கு வழிச் சாலையாக்குதல், சென்னை-காஞ்சி புரம்-வேலூர் நெடுஞ்சாலை, சென்னை-மதுரை தேசிய நெடுஞ் சாலையை 6 வழிச் சாலையாக மாற்று தல் உள்ளிட்ட திட்டங்களை விரைவு படுத்த வேண்டும். பிரதமர் தொடங்கிவைத்துள்ள ‘வந்தே பாரத்’ ரயில் சேவை, தமிழ்நாட்டில் மேற்குப் மக்களுக் குப் பயனுள்ளதாக இருக்கும். இதேபோல, சென்னை- மதுரை இடையே’வந்தே பாரத்’ ரயில் சேவையைத் தொடங்க வேண்டும். மேலும், அனைவரும் பய ணிக்க உதவும் வகையில், ‘வந்தே பாரத்’ ரயில் டிக்கெட் கட்டணத்தைக் குறைக்க வேண்டும்.

விமான நிலைய விரிவாக்கம்: 

தமிழகத்தின் அடுத்தகட்டப் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவை யான புதிய விமான நிலையத்தை பரந்தூரில் அமைப்பதற்கான பணி களைத் தொடங்கியுள்ளோம். இது தவிர, கோவை, மதுரை,திருச்சி, தூத்துக்குடி விமான நிலையங்களின் விரிவாக்கத்துக்காக மாநில அரசால் ரூ.1,894 கோடி நிதி  ஒதுக்கீடு செய்யப்பட்டு, நிலம் கைய கப்படுத்தப்படும் பணிகள் நடை பெற்று வருகின்றன. இந்தப் பணி களுக்கும் ஒன்றிய அரசு நிதி ஒதுக் கீடு செய்ய வேண்டும். சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-வது கட்டப் பணி களுக்கான ஒன்றிய அரசின் பங்கை வழங்குவதற்கான ஒப்புதல் கடந்த 2 ஆண்டாக நிலுவையிலே உள்ளது. அதை காலதாமதமின்றி நிறை வேற்றித் தர வேண்டும். தமிழ்நாடு பட்ஜெட்டில் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் அறி விக்கப்பட்டுள்ளன. இதற்கான கருத் துரு விரைவில் ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட உள்ளது. இவற்றுக்கும் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும்.  மக்கள் தேவைகளை நிறை வேற்ற வேண்டிய கடமை மாநிலங் களுக்கே அதிகம் உள்ளது. எனவே, மாநிலங்களின் நிதி தேவைகளையும், திட்டங்களையும் நிறைவேற்ற ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு மிகவும் அவ சியமாகும். பிரதமரும் ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் என்ப தால், எனது கோரிக்கையை அவர் உணர்வார் என்று நம்புகிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார். பிரதமரிடம் மனு:  நிகழ்ச்சி முடிந்து, சென்னை விமான நிலையம் சென்ற பிரதமர்  மோடியை, முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு தலைமைச் செயலர் வெ.இறையன்பு ஆகியோர் சந்தித்து, தமிழ்நாடு திட்டங்கள் தொடர்பான மனுவை அளித்தனர்.