சென்னை, அக்.8- இஸ்ரேலில் சிக்கிய தமிழர் களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் - பாலஸ்தீனத்தைச் சூழ்ந்துள்ள போர் மேகத்தால் பல நாடுகளும் தத்தம் மக்களுக்கு பயண எச்சரிக்கைகளை விடுத்து வருகிறது. ஒன்றிய அரசும் இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் அவசர தேவைக்கு 97235 256748 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் அல்லது cons1.telaviv@mea.gov.in என்ற மின்னஞ்சலுக்கு தகவல் அனுப்பலாம் என்றும் அறிவித்தி ருக்கிறது. அமைச்சர் மஸ்தான் இந்நிலையில், இஸ்ரேலில் இருந்து தங்களை மீட்க வேண்டும் என இதுவரை அயலகத் தமிழர் நல வாரியத்தில் 18 பேர் தொடர்பு கொண்டு இருப்பதாகவும், அதில் கோவையைச் சேர்ந்த 3 மாண வர்களும் உள்ளதாகவும் வெளி நாடு வாழ் தமிழர்கள் நல வாரிய அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரி வித்துள்ளார். தற்போதைய நிலை யில், 18 பேரும் பாதுகாப்பாக இருப்ப தாகவும், அவர்களை மீட்க நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவ தாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இஸ்ரேலில் இருக்கும் தமிழர்கள் nrtchennai@tn.gov.in, என்ற nrtchenna.in@gmail.com மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள லாம் என்றும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். மேலும், +91-87602 48625, +91-99402 56444, +91-96000 23645 போன்ற தொடர்பு எண்களும் அறிவித்துள்ளார்.