tamilnadu

img

மாணவர்களை தாக்கிய நீட் பயிற்சி மையம் மீது உரிய நடவடிக்கை

திருநெல்வேலி,அக்.19-  நெல்லை பாளையங்கோட் டையில் ஜால் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் படிக்கும் மாண வர்களை பயிற்சி நிர்வாகி  பிரம் பால் தாக்கியது, அவதூறாக பேசியது, காலணியை வீசி யது உள்ளிட்ட சம்பவங்கள் வீடியோ வெளியாகி பரபரப்பை யும் அதிர்ச்சியையும் ஏற் படுத்தியுள்ளது. மாணவர்களை தாக்கிய சம்பவத்திற்கு அரசியல் கட்சி கள்,மாணவர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி யுள்ளன. இச்சம்பவம் குறித்து மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக் கப்பட்டுள்ளது. 3 பிரிவுகளில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர். மாநில மனித உரி மை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் பயிற்சி மையத் துக்கு வெள்ளிக்கிழமை நேரில் சென்று விசாரணை நடத்தினார். இந்நிலையில், திருநெல்வேலி மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் தன்ஷிகா பேகம் மற்றும் பாளையங்கோட்டை வட்டாட்சி யர் இசைவாணி உள்ளிட்ட அலுவலர்கள் நீட் பயிற்சி மையத்தில் சனிக்கிழமை யன்று ஆய்வு மேற்கொண்ட னர்.  பயின்று வரும் மாணவி கள் விடுதியையும் ஆய்வு செய்தனர். மாணவிகள் தங்கும் விடுதி அரசின் உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்டது விசா ரணையில் தெரியவந்துள் ளது. இதையடுத்து விடுதி செயல்பட்டது தொடர்பாக விளக்கம் கேட்டு சமூக நலத் துறை சார்பில் பயிற்சி மையத் துக்கு நோட்டீஸ் வழங் கப்பட்டுள்ளது. மகளிர் விடுதிகள் தொடர் பான அனுமதி பெறுவதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கியும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட மாணவர்கள் தொடர்பான விசாரணை தொ டர்பாக குழந்தைகள் நல  பாதுகாப்புத் துறை மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்துள் ளது. காவல் துறையினரும் பயிற்சி மையத்தில் மாணவர் கள் தாக்கப்பட்டது குறித்தும், மாணவர்களின் பெற்றோர்க ளிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில்  நீட் பயிற்சி மையத்தின் மீது உரிய நடவ டிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணி யன் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன் சென்னையில் சனிக் கிழமையன்று செய்தியாளர்க ளிடம் கூறுகையில்,  “நீட் பயிற்சி மையத்தில் மாணவர்களை தாக்கிய அதன் உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப் படும்” என்று தெரிவித்தார்.