சென்னை, மே 24- சென்னை உயர்நீதி மன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள டி.ராஜா புத னன்று (மே 24) ஓய்வு பெற்றார். இதனால் அவருக்கு அடுத்த மூத்த நீதிபதியாக உள்ள எஸ்.வைத்தி யநாதன் பொறுப்பு தலைமை நீதிபதி யாக நியமிக்கப்பட்டுள்ளார். கோவையில் 1962 ஆம் ஆண்டு ஆகஸ்டில் பிறந்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், பள்ளி, சட்டப் படிப்பை சென்னையில் முடித் தார். 1986 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கறி ஞர் தொழிலை துவக்கிய எஸ்.வைத்தியநாதன் 2015 இல் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதி யாக நியமிக்கப்பட்டு ள்ளர். இந்த நிலையில் சென்னை உயர்நீதி மன்றத்திற்கு தலைமை நீதிபதி நியமிக்கும் வரை எஸ்.வைத்தியநா தனை பொறுப்பு தலைமை நீதிபதி யாக நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.