tamilnadu

img

தஞ்சாவூர் மாணவி மரணத்தில் மதச்சாயம் பூசாதீர்!

சென்னை, ஜன.23- தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவப் பள்ளியில்  படிக்கும் மாணவியின் மரணம் தொடர்பாக மதமாற்றம் செய்த தாக பொய்ப் பிரச்சாரம்செய்ய மத, அரசியல் சக்திகள் முயற்சிப்ப தாக தமிழ்நாடு ஆயர் பேரவை (டிஎன்பிசி)  குற்றம்சாட்டியுள்ளது. இத்தகைய முயற்சியில் ஈடுபடு வோர் மீது காவல்துறை உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும்; அரசும் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் எப்போதும் ஆதரவளிப்போம் என்றும் ஆயர் பேரவை கூறியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு ஆயர் பேரவைத் தலைவர் அந்தோணி பாப்பு சாமி வெளியிட்டுள்ள அறிக்கை: பள்ளியில் நடந்த இந்த வருந்தத்தக்க சம்பவத்தின் உண்மையான காரணத்தை அறிய முயலாத மதவாத மற்றும் அரசியல் சக்திகள், ‘மத மாற்றம்’ என்ற பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டு பிரச்சனையைத் திசை திருப்ப முயல் கின்றன. இந்தப் பிரச்சாரத்தின் மூலம் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிக்கின்றன.  நடைபெற்ற சம்பவம் குறித்து சட்டப்பூர்வ, உரிய விசாரணை நடத்தக் கோருவதற்குப் பதிலாக, பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை ‘மத மாற்றம்’  குறித்து முழக்கங்களை எழுப்பியிருப்பது வேடிக்கையாக உள்ளது.  

சம்ப வத்தின் மீது மதச் சாயம் பூச வேண்டாம்.   அண்ணாமலை மற்றும் அவரைப் போன்றவர்களின் அறிக்கைகளை நாங்கள் தனி யாகக் கருதவில்லை, மாறாக நாடு முழுவதும் உள்ள பெரும் பான்மை மத மற்றும் அரசியல் சக்திகளின் தவறான முழக்கங்களின் ஒரு பகுதியாகவே கருதுகிறோம். அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆயர்பேரவை எப்போதும் துணை நிற்கும். மாணவி மரணம் குறித்து நடுநிலையான விசாரணையை தமிழக அரசும் காவல் துறையும் மேற்கொள்ள வேண்டும்.  “கிறிஸ்தவ சிறுபான்மையினர்” நடத்தும் நிறுவனங்களில் “பெரும் பான்மை சமூகங்களை” சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.  சம்பந்தப்பட்ட பள்ளியில் படிக்கும் மாணவியை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை நிராகரிக்கிறோம். மாணவியின் மரணத் திற்கு இரங்கல் தெரிவித்துக்கொள் கிறோம்.  சிறுமியின் மரணத்திற்கு காரண மானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்ப தில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.