சென்னை, ஜூலை 26 - ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் மாற்றுத்திற னாளிகளுக்கு எந்தவொரு திட்டத்தையும் அறிவிக்க வில்லை என்று மாற்றுத்திற னாளிகள் உரிமைகளுக் கான தேசிய மேடையின் செயல் தலைவர் எஸ்.நம்பு ராஜன் குற்றம்சாட்டினார். ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கையில் மாற்று த்திறனாளி களுக்கான துறைக்கு 0.025 விழுக் காடு நிதி மட்டுமே ஒதுக்கப் பட்டுள்ளது. மாற்றுத்திற னாளிகளை புறந்தள்ளும் வகையில் நிதி ஒதுக்கீடு அமைந்துள்ளது. இதனை கண்டித்து வெள்ளியன்று (ஜூலை 26) நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான தேசிய மேடை ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதனையொட்டி மாநி லம் முழுவதும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக் கான சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள், பட்ஜெட் நகலை கிழித்து எறிந்தனர். இதன் ஒரு பகுதியாக மத்திய சென்னை மாவட்டம் சார்பில் மாவட்டத் தலை வர் சுரேந்திரன் தலைமை யில் சாஸ்திரி பவன் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எஸ்.நம்புராஜன், மாவட்டச் செயலாளர் எஸ். மனோன்மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டார். ‘யானை பசிக்கு சோளப்பொரி’ செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.நம்புராஜன் “உலகம் முழுவதும் 16 விழுக்காடு மாற்றுத்திற னாளிகள் உள்ளனர். இந்தி யாவில் மாற்றுத்திறனாளி கள் குறித்த கணக்கெடுப்பு கூட ஒன்றிய பாஜக அரசு நடத்தாமல் உள் ளது. பட்ஜெட்டில் மாற்றுத் திறனாளிகள் என்று ஒரு வார்த்தை கூட இல்லை. மாற்றுத்திறனாளிகளுக்கு என்று ஒரு திட்டத்தை கூட அறிவிக்கவில்லை. யானை பசிக்கு கடுகு போடுவதை போன்று நிதி ஒதுக்கி உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். ஒவ்வொரு துறைக் கான நிதி ஒதுக்கீட்டில், 5 விழுக்காடு மாற்றுத்திற னாளிகளுக்கு என்று ஒதுக்க கோரி வருகிறோம். அது குறித்து எதுவும் பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை. ஒன்றிய அரசின் பட்ஜெட் மோசடியானது. மாற்றுத்திற னாளிகளை ஏமாற்றக் கூடியது” என்று கூறினார். தென் சென்னை மாவட்டத் தலைவர் கிருஷ் ணன் தலைமையில் தாம்பரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் மாநி லத் தலைவர் தோ.வில்சன், மாவட்டச் செயலாளர் எம்.குமார் உள்ளிட்டோர் பேசினர்.