ஆம்ஸ்ட்ராங் கொலையில் மேலும் ஒருவர் கைது
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், வேலூர் சிறையில் உள்ள வியாசர்பாடி பிரபல ரவுடி நாகேந்தி ரன், அவரது மகன் அஸ்வத்தாமன் உட்பட 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நாகேந்திரனின் 2 ஆவது மகன் அஜித்ராஜ் இதில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் தேடி வந்த நிலையில், தலைமறைவானார். பிறகு, அமைக்கப்பட்ட தனிப்படை தேடுதலில் சிக்கிய அஜித்ராஜ் கைது செய்யப்பட்டார்.
பண்டிகை கால முன்பணம் உயர்வு
சென்னை: அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பண்டிகை கால முன்பணம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 8 லட்சம் அரசு ஊழி யர்கள் பயன்பெறுகின்றனர். 13
பேருக்கு நீதிமன்ற காவல்
புதுக்கோட்டை: வடகாட்டில் இருதரப்பு பிரச்சனை யில் 13 பேருக்கு மே 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 13 பேர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 13 பேரை, 15 நாட்கள் நீதிமன்ற காவ லில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது
ரூ.22 கோடியில் தடுப்பணை
அரியலூர்: வாரணவாசி கிராமத்தில் மருதையாற் றின் குறுக்கே ரூ.22 கோடியில் தடுப்பணை கட்டுவதற் கான பணிகளை மேற்கொள்ள நீர்வளத்துறை டெண்டர் கோரியது. அரியலூரை அடுத்த கொல்லா புரத்தில் நடந்த நிகழ்ச்சியில் தடுப்பணை கட்டப்படும் என முதலமைச்சர் கூறியிருந்தார்.
மனித உரிமை ஆணையம் பரிந்துரை
சென்னை: தமிழகத்தில் உரிமை கோரப்படாத உடல்களை கண்ணியமான முறையில் அடக்கம் செய்வது தொடர்பாக சுற்றறிக்கை வெளியிட தமிழ்நாடு அரசுக்கு மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. மேலும் மாநகராட்சி, நகராட்சி, பஞ்சா யத்துகளில் உரிமை கோரப்படாத உடல்களை அடக்கம் செய்ய தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவில் குளத்தில் மூழ்கி 3 பேர் பலி
திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் குளத்தில் குளிக்கச் சென்ற பாடசாலை மாண வர்கள் 3 பேர் நீரில் மூழ்கி பலியானார்கள். இவர்கள் சென்னை குன்றத்தூர் ஹரிஹரன் (17), அம்பத்தூர் வெங்கட்ராமன் (19), தென்காசி மாவட்டம் வீரராகவன் (24) என்பது தெரியவந்துள்ளது. மேலும், இந்த 3 மாண வர்களும் சென்னை அருகே சேலையூரில் உள்ள குரு குலத்தில் பயின்று வந்தனர். இவர்களில், குளத்தில் மூழ்கிய ஒருவரை காப்பாற்ற, மற்ற இருவரும் முயன்ற தில் 3 பேரும் நீரில் மூழ்கி பலியாகினர். இதுகுறித்து காவல்துறை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
தமிழிசைக்கு அமைச்சர் பதிலடி!
சென்னை: “இனம், மதம், மொழிகளுக்கு அப்பாற் பட்ட பூமி தமிழ்நாடு. தீவிரவாதத்திற்கு எப்போதும் முதலமைச்சர் துணை போக மாட்டார். தீவிரவாதத்தை இரும்பு கரம் கொண்டு அடக்குவார். அமைதி பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டில் சிலர் விஷம கருத்துக்களை விதைக்க முற்படுகிறார்கள். அதற்கு துளியும் தமிழ்நாடு இடம் தராது. இங்கு இஸ்லாமியர்களும், இந்துக்களும் சகோதர-சகோதரிகளாக உள்ளனர். மொழியால், மதத்தால் பிளவு ஏற்படுத்தி தேர்தல் நேரத்தில் குளிர் காயலாம் என்று தமிழிசை சௌந்தர ராஜன் நினைக்கிறார். ஆனால் அவருக்கு குளிர் ஜுரம்தான் வருமே தவிர, வேறு எதுவும் தமிழ்நாட்டில் நடக்காது” என்று செய்தியாளர்கள் கூட்டத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதிலடி கொடுத்தார்.