tamilnadu

img

ஓவியக் கலைஞர்கள்

மாநில மாநாடு மதுரையில் நடைபெறுகிறது என்ற அறிவிப்பு வெளியானவுடன் நிதித் தேவை பிரதான மாக இருந்தாலும் நிதி திரட்டுவதற்கு அடிப்படையே மாநாடு நடைபெறும் செய்திதான். இதை மதுரை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு சென்றது சுவர் விளம்பரம்தான். ஓவியக் கலைஞன் வெண்புறா, நாகமலைப் புதுக்கோட்டை பாண்டியராஜன், பூமிராஜா ஆகியோர் இதைக் கொண்டு சேர்த்தனர். மற்றொரு ஓவியக் கலைஞரான ரஹ்மத் பொதுக்கூட்ட மேடை வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை மிகவும் நேர்த்தியாகச் செய்திருந்தார். இந்த ஓவியக்கலைஞர்கள் மாநாட்டின் வெற்றிக்கு ஒர் முக்கியப்புள்ளியாக இருந்துள்ளனர் என்றால் அது மிகையல்ல.