tamilnadu

முன்னாள் மாணவர்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் சிறப்புத் துணைத் தேர்வுகள் அறிவிப்பு

முன்னாள் மாணவர்களுக்கு ஒருமுறை நடத்தப்படும்  சிறப்புத் துணைத் தேர்வுகள் அறிவிப்பு 

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் 

திருவாரூர், ஜுன் 27-  தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் (CUTN), அதன் முன்னாள் மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, ஒருமுறை மட்டுமே நடத்தப்படும் சிறப்புத் துணைத் தேர்வுகளை அறிவித்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட கல்வி காலக்கெடுவிற்குள் தேவையான அனைத்துப் பாடத்தாள்களிலும் தேர்ச்சி பெறாத முன்னாள் மாணவர்களுக்காக இந்த அரிய வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த சிறப்புத் தேர்வு, பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட 2009-2010 கல்வி ஆண்டில் சேர்ந்த மாணவர்கள் முதல், 2022-2023 கல்வி ஆண்டில் இறுதி ஆண்டு முடித்த அல்லது வெளியேறிய மாணவர்கள் வரை அனைவருக்கும் பொருந்தும்.  பல்வேறு தவிர்க்க முடியாத சவால்கள் காரணமாக, நிர்ணயிக்கப்பட்ட கல்வி காலக்கெடுவிற்குள் தங்கள் படிப்பை முடிக்க இயலாத முன்னாள் மாணவர்களின் தொடர்ச்சியான கோரிக்கைகளை ஏற்று, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கி, தங்களின் பட்டப்படிப்பை நிறைவு செய்ய வழிவகுக்கும். இதுகுறித்து, தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டாளர், பேராசிரியர் சுலோச்சனா சேகர் கூறுகையில், கல்வித் தடைகளை நீக்கி, மாணவர்களின் மேம்பாட்டிற்கு உதவுவதே எங்களின் நோக்கம். இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, முன்னாள் மாணவர்கள் தங்கள் நிலுவையிலுள்ள பாடங்களில் தேர்வெழுதி, பட்டத்தைப் பெற்று, தங்கள் தொழில் வாய்ப்புகளை மேம்படுத்திக்கொள்ளலாம் அல்லது மேல்படிப்பைத் தொடரலாம்” என்றார். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், பேராசிரியர் எம். கிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும், தகுதியுள்ள மாணவர்கள், திங்கட்கிழமை, ஜூலை 7, 2025 அன்று மாலை 5 மணிக்குள், அதிகாரப்பூர்வ இணையதளமான [http://exam.cutn.ac.in:8080/course-reg-2025-05-supp/](http://exam.cutn.ac.in:8080/course-reg-2025-05-supp/) மூலம் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். தேர்வுக் கட்டண விவரங்கள்: தியரி (theory)பாடங்கள்: ஒரு பாடத்திற்கு ரூ.1,600, செய்முறைத் தேர்வுகள் (practical): ஒரு பாடத்திற்கு ரூ.1,375, கிரேடு (grade) கார்டு வழங்குதல் ரூ.200 என தெரிவித்தார்.