tamilnadu

img

அதிமுக தொண்டன் சும்மா இருக்கமாட்டான்

பாத யாத்திரை என்று கூறிவிட்டு, சொகுசு வாகனப் பயணம் மேற்கொண்ட பாஜக தலைவர் அண்ணாமலை, அண்மையில் அறிஞர் அண்ணாவை விமர்சித்திருந்தார்.  பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பேசும்போது, அண்ணாவை ஒருமையில் விமர்சித்ததாக ஒரு தகவலையும் கூறியிருந்தார். இதற்கு அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான டி. ஜெயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார். “அண்ணா பற்றி எந்த புத்தகத்தில் அண்ணாமலை படித்தார் என்று சொல்ல வேண்டும். கட்சியை வளர்க்க அண்ணாமலை என்ன வேண்டுமென்றாலும் பேசிக்கொள்ளட்டும்; எங்களுக்கு கவலையில்லை. ஆனால், நடக்காத விஷயத்தை ஒன்றை கூறி பேரறிஞர் பெயரை களங்கப்படுத்தக் கூடாது. ஏற்கனவே ஜெயலலிதா பற்றி பேசி விட்டு மன்னிப்பு கேட்டவர் அண்ணாமலை. மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தும் வழக்கத்தை அண்ணாமலை கைவிட வேண்டும். நடக்காத விஷயங்களை நேரில் பார்த்ததுபோல மீண்டும் மீண்டும் பேசுவதை அண்ணாமலை நிறுத்திக் கொள்ளவேண்டும். நடக்காத ஒன்றை பேசியதற்காக அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.