tamilnadu

img

அண்ணா நினைவு நாள்: முதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம்

சென்னை, பிப்.3- தமிழ்நாடு முன்னாள்  முதல்வர் அண்ணாவின் 54வது நினைவு நாளை யொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலை மையில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.,க்கள் அமைதி ஊர்வலம் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர். வாலாஜா சாலையில் தொடங்கிய இந்த ஊர்வ லம் மெரினா கடற்கரை யிலுள்ள அண்ணா நினை விடம் சென்றது. இதை யொட்டி வாலாஜா சாலை  முழுவதும் போக்குவரத்து தடை செய்யப்பட்டு காவல்துறை கட்டுப் பாட்டில் கொண்டு வரப்பட்டது. இந்த ஊர்வ லத்தில் முதல்வருடன் திமுக  பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளா ளர் டி.ஆர்.பாலு, அமைச் சர்கள், மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஊர்வலத்தின் முடிவில் அண்ணா நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர்.