tamilnadu

img

அங்கித் திவாரி ஜாமீன் வழக்கு - நீதிபதி விலகல்

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் வழக்கை விசாரிக்க தான் விரும்பவில்லை என்றும், விசாரணையில் இருந்து விலகுவதாகவும் நீதிபதி விவேக்குமார் அறிவித்தார்.
திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் அங்கித் திவாரி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், 2அவது முறையாக ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அங்கித் திவாரியின் வழக்கை விசாரிக்க தான் விரும்பவில்லை என்றும், விசாரணையில் இருந்து விலகுவதாகவும் நீதிபதி விவேக்குமார் அறிவித்தார்.