பாட்னா, ஜூன் 19- அக்னிபாத் திட்டத்திற்கு நாடு முழுவதும் கோபாவேச எதிர்ப்புக் கிளம்பி யுள்ளது. இந்தச் சட்டத்தை கிழித்தெறிய வேண்டுமென்ற குரல்கள் கொந்தளிப்புடன் எழுந்துள்ளன. இந்த நிலையில் பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் உள்ள ஆனந்த்பூர் கிராமத்தில் வசித்து வரும் ரோகித்குமார் கூறியதாவது:- இந்திய ராணுவத்தில் சேர கடந்த நான்கு ஆண்டுகளாக தயாராகி வருகிறேன். என்னுடைய குடும்பம் விவசாயக் குடும்பம். வறுமை ஒன்றே எங்களுக்கு நிலையான துணை. ராணுவத்திற்கு “கட் ஆஃப் மதிப்பெண் கள்” தேவையில்லை என்பதால், நான் ஒரு படைவீரனாக மாறலாம் என நினைத்தேன். இப்போது அக்னிபாத் திட்டத்தின் கீழ் நான்கு ஆண்டுகளுக்கு இளைஞர்களை நியமிக்க ஒன்றிய அரசு எடுத்துள்ள முடிவு என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ராணுவப் பணியும் நிச்சயமற்றதாகிவிட்டது. புதிய திட்டத்தின்படி நான்கு ஆண்டுகள் மாதம் ரூ.25,000-30,000 சம்பளம் பெறுவேன். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, நான் ராணுவத்திலிருந்து வெளியேற்றப்படலாம். அப்போது நான் என்ன செய்வேன்? நான்கு வருடங்கள் கழித்து நான் பக்கோடா விற்க வேண்டும்! அல்லது எங்காவது தனியார் நிறு வனத்தில் வேலைக்குச் செல்ல வேண்டு மென்றார்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரைச் சேர்ந்த நரேஷ் பிஸ்வாஸ் (23) என்ற கூறுகையில், பாதுகாப்புத் துறை மற்றும் மாநில காவல்துறையில் வேலை பெற முயன்று தோல்வியுற்றேன். வேலைக்காக அலைபவர்களிடம் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக ஒன்றுபட வேண்டுமென வலியுறுத்தி இவர் மாவட்டத் தலைமை யகமான நபரங்பூரிலிருந்து உமர்கோட் வரை 64 கி.மீ. மாரத்தான் ஓட்டத்தை மேற்கொண் டார். அவர் இந்த பயண தூரத்தை ஐந்து மணி நேரம் 26 நிமிடங்களில் கடந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஒருவர் நான்கு ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றி விட்டு திரும்பிவிட்டால் அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகும். மற்ற துறைகளில் வேலை வாய்ப்புகள் குறைந்து வரும்போது, பாதுகாப்புத் துறை யிலாவது வேலை கிடைக்கும். கௌரவ மான சம்பளம் கிடைக்கும் என எதிர்பார்த்தேன். அதற்கான பாதையை “அக்னி பாத் மூடுகிறது” என்ற அவர் மேலும் கூறுகையில் நான்காண்டு பணியை 15 ஆண்டுகளாக மாற்ற வேண்டும் என்றார்.