tamilnadu

img

குழந்தைகளைப் பாதுகாக்கச் சொன்னால் அதானி-அம்பானியை பாதுகாக்கும் பிரதமர்

மதுரை, டிச.10- அங்கன்வாடி ஊழியர்கள்-உதவியாளர்கள் சம்மேளனத்தின் 10-ஆவது அகில இந்திய மாநாடு மதுரையில் டிசம்பர்  6 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 9 ஆம் தேதி நிறைவ டைந்தது. டிசம்பர் 9 வெள்ளிக்கிழமை நடை பெற்ற பேரணியில் தமிழகம் முழுவதுமிருந்து சுமார் 10 ஆயிரம் அங்கன்வாடி ஊழியர்கள்-உதவியாளர்கள் கலந்துகொண்டனர். பேரணி யைத் தொடர்ந்து பழங்காநத்தம் பகுதியில் நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் அமைப்பின் பொ துச் செயலாளர் ஏ.ஆர்.சிந்து பேசியதாவது:- அமைப்பின் 10-ஆவது அகில இந்திய மாநாட்டு பேரணி பிரதமர் மோடி அரசுக்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்துள்ளது. இதன் மூலம் அங்கன்வாடி ஊழியர்கள்-உதவியாளர் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். ஆனால், பிரதமர் செய்வாரா...? அவர் நாட்டின் பிரதமராகவும் இல்லை. பாஜக-வின் பிரதமராகவும் இல்லை. ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் பிரதமராக, அதானி, அம்பானிகளின் பிரதமராக உள்ளார். குழந்தைளுக்கான மானியம் வெட்டப்பட்டதால் அவர்கள் எடையின்மை, வளர்ச்சியின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், போஷான் டிராக்கில் விவரங்களை பதிவேற்றம் செய்யக் கூறுகிறார் பிரதமர். போஷான் டிராக் குழந்தை களுக்கு போஷாக் அளிப்பதற்காக அல்ல திட்டத்தை சீர்குலைக்கவே உள்ளது. விவ சாயிகள் தில்லியில் ஒரு வருடம் போராடி கோரிக்கைகளை வென்றெடுத்துள்ளனர். அவர்கள் வழியில் நாமும் கோரிக்கைகளை வென்றடுப்போம். தில்லி நாடாளுமன்றம் நோக்கி நடைபெற உள்ள விவசாயிகள், விவசா யத் தொழிலாளர்கள் பேரணியில் அங்கன்வாடி ஊழியர்கள்-உதவியாளர்கள் அதிகளவில் பங்கேற்பார்கள் என்று கூறினார்.

அமைப்பின் அகில இந்திய தலைவர் உஷா ராணி பேசுகையில்,  நாடு முழுவதும் அங்கன் வாடி ஊழியர்களும் உதவியாளர்களும் சந்திக்கும் பிரச்சனைகள் ஒரே மாதிரிதான் உள்ளது. ஊழியர்கள்-உதவியாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் பிரதமர் மோடியை ஆட்சியிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். கிராமப்புறத்தில் விவசாயிகள்-விவசாயத் தொழிலாளர்களின் குழந்தைகள் பசியிலும் வறுமையிலும் வாடிக்கொண்டிருக்கிறார்கள். இதைப் பற்றி கவலைப்படாத பிரதமர், ஊட்டச் சத்து திட்டத்திற்கான நிதியை 2021-2022-ஆம் ஆண்டு 30 சதவீதம் வெட்டியுள்ளார். அதே நேரத்தில் அதானி-அம்பானிகளின் கடன்களை தள்ளுபடி செய்ததோடு, புதிதாக பல நூறு கோடி ரூபாய்களை கடன் வழங்கியுள்ளார் என்றார்.

அமைப்பின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் டி.டெய்சி பேசுகையில், “  1,200 ரூபாய் மதிப்பி லான சிலிண்டருக்கு ரூ.403 வழங்கினால் எப்படி குழந்தைகளுக்கு சமைத்துக் கொடுப்பது? ஒரு குழந்தைக்கு எண்பது பைசா வில் எப்படி காய்கறி வாங்குவது? குழந்தை களுக்கு சேவை செய்யாமல் பிரதமர் யாருக்கு சேவகம் செய்கிறார்?  தமிழக முதல்வர் கோரிக் கைகளை நிறைவேற்ற காலஅவகாசம் கேட்டுள் ளார். குறுகிய காலத்தில் எங்களது கோரிக்கை களை நிறைவேற்ற வேண்டும்” என்றார். கூட்டத்தில் சிவகங்கை மாவட்டம் நெற் குப்பையைச் சேர்ந்த அங்கன்வாடி ஊழியர் முத்துசெல்வியின் பரதநாட்டியம் மற்றும் வயலின் இசை நிகழ்வு நடைபெற்றது. கூட்டத்தில் அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில நிர்வாகிகள் ரத்னமாலா, பொருளாளர் தேவமணி, சிஐடியு  அகில இந்திய செயலாளர் ஆர்.கருமலையான், மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், மாநிலப் பொரு ளாளர் மாலதிசிட்டிபாபு, மாநிலச் செயலாளர் கள் கோபிகுமார், திருச்செல்வன், மதுரை மக்க ளவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மாநக ராட்சி துணைமேயர் டி.நாகராஜன், சிஐடியு மாநகர் மாவட்டத் தலைவர் இரா.தெய்வ ராஜ், மாவட்டச் செயலாளர் இரா.லெனின், பொருளாளர் லூர்து ரூபி, புறநகர் மாவட்டத் தலைவர் கண்ணன்,  செயலாளர் அரவிந்தன், பொருளாளர் ஜி.கௌரி மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள், சிஐடியு-வோடு இணைக்கப்பட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய வரவேற்புக்குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள் மாநாட்டு அரங்கில் பாராட்டி கௌர விக்கப்பட்டனர்.