tamilnadu

img

ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் சிக்கிய மாணவி மரணம்

விசாகப்பட்டினம், டிச.9- ஆந்திர மாநிலம், கிழக்கு கோதா வரி மாவட்டம், அன்னவரம் பகுதியை சேர்ந்தவர் சசிகலா (20). இவர் விசாகப் பட்டினம் அருகே உள்ள துவ்வாடா எனும் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி யில் எம்.சி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.  இந்நிலையில், இவர் புதனன்று சசிகலா குண்டூர்-ராயகடா எக்ஸ்பிரஸ் ரயிலில் கல்லூரிக்கு சென்று துவ்வாடா ரயில் நிலை யத்தில் இறங்கினார். அப்போது கால் தவறி, ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையில் விழுந்தார்.  இதனால் அவரால் வெளியே வர  முடியவில்லை. 2 மணி நேரம் போராட்டத் திற்கு பிறகு நடைமேடையை இடித்து சசிகலாவை மீட்டு விசாகப்பட்டினம் கிம்ஸ் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  அங்கு சசிகலாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரது இடுப்பு எலும்புகள் நொறுங்கி இருப்பதாக தெரிவித்தனர். மேலும் அவரது கிட்னியில் ரத்த கசிவு ஏற்பட்டதால், தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார்.