ஆந்திராவின் போராளி என்.பிரசாதராவ்
தோழர் என்.பிரசாத ராவ் அவர்கள் வசதியான குடும்பத்தில் ஆந்திரா வின் கிருஷ்ணா மாவட் டத்தில் பிறந்தார். பன ராஸ் பல்கலைக்கழ கத்தில் படித்து கொண்டிருந்த பொழுது விடுதலைப் போராட்டத்தில் ஈர்க்கப் பட்டார். 1934ஆம் ஆண்டு கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்தார். கட்சி அமைப்பா ளர் என்ற முறையில் ஆந்திராவில் கட்சியை கட்டுவதில் தோழர்கள் சுந்த ரய்யா/ பசவபுன்னையா ஆகியோரு டன் இணைந்து முக்கிய பங்காற்றி னார். முனாகலா விவசாயிகள் போராட் டத்திலும் பின்னர் தெலுங்கானா போராட் டத்திலும் மிக முக்கியப் பங்காற்றினார். தெலுங்கானா போராட்டத்தின் பொழுது தலைமறைவு வாழ்வில் இருந்த அவர் 1952 பொது தேர்தல்களுக்கு பின்னர்தான் பகிரங்க வாழ்வுக்கு வந்தார். வகித்த பொறுப்புகள் ஆந்திராவில் விவசாயிகள் இயக்கத்தையும் தொழிற்சங்க இயக்கத் தையும் கட்டுவதில் முக்கிய பங்கை ஆற்றினார் பிரசாத ராவ். அவர் வகித்த பொறுப்புகள்: Lஆந்திர விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர்- 8 ஆண்டுகள். Lஅகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர்- 8 ஆண்டுகள். Lஆந்திர விவசாய தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளர்- 2 ஆண்டுகள் Lஆந்திர விவசாய தொழிலாளர் சங்கத்தின் தலைவர்- 5 ஆண்டுகள் Lஆந்திர சிஐடியு பொதுச் செயலாளர்- 26 ஆண்டுகள் Lஆந்திர சிஐடியு தலைவர்- 3 ஆண்டுகள் Lசிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் 2000 வரை. 32 பேரில் ஒருவர் ஒன்றுபட்ட கட்சியின் மத்தியக் குழு வுக்கு 1953ஆம் ஆண்டு மதுரையில் நடந்த அகில இந்திய மூன்றாவது மாநாட்டில் தேர்வு செய்யப்பட்டார். சிபிஐ(எம்) உதயமான பின்னர் 1964 முதல் 1999 வரை மத்தியக் குழு உறுப்பி னராக இருந்தார். பின்னர் வயது காரண மாக அந்த பொறுப்பிலிருந்து விடு வித்துக் கொண்டார். கட்சியின் சித்தாந்த நிலையில் மிகவும் உறுதியாக நின்ற அவர், திருத்தல்வாதத்துக்கு எதிராக கடுமையாகப் போராடினார். சிபிஐ (எம்)-ஐ உருவாக்க ஒன்றுபட்ட கட்சியின் பொது கவுன்சிலிலிருந்து வெளிநடப்பு செய்த 32 பேரில் பிரசாதராவும் ஒருவர். பின்னர் ஆந்திராவில் நக்சலைட் இயக்கம் தீவிர சீர்குலைவு பணியில் ஈடுபட்ட பொழுது, இடது சீர்குலைவுவா தத்துக்கு எதிராகவும் கடுமையாகப் போராடினார். 1964-66 காலகட்டத்தில் சுந்தரய்யா உட்பட ஆந்திராவின் தலை வர்கள் பலரும் சிறையில் இருந்த பொழுது கட்சியை திறமையாக வழி நடத்தினார். நிலச்சீர்திருத்த உபகுழு உறுப்பினர் பிரசாத ராவ் ஒருமுறை சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் ஒருமுறை மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டு திறமையாகச் செயல் gட்டார். இரண்டாவது மற்றும் மூன்றா வது திட்டக்குழுவில் நிலச்சீர்திருத்தத் துக்கான உப குழுவில் உறுப்பினராக இருந்தார். தோழர் பிரசாத ராவ் 68 ஆண்டுகள் கட்சி வாழ்வுக்கு சொந்தக்கா ரர். வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தா லும் மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். தனது சொத்துக்கள் அனைத்தையும் கட்சிக்கு கொடுத்தவர். தலைசிறந்த மார்க்சிய-லெனினிய வாதி. அவர் வாழ்வு முழுவதும் அர்ப்ப ணிப்பு/ தியாகம்/ துன்பங்களை எதிர் கொள்ளல் என்றே இருந்தது. நீண்ட நாட் கள் தலைமறைவு வாழ்வும் சிறைவாழ்வும் எதிர்கொண்டவர் தோழர் பிரசாதராவ். இத்தகைய மகத்தான வாழ்வுக்கு சொந்தகாரரான தோழர் பிரசாத ராவ் அவர்கள் தனது 89ஆவது வயதில் உயிர் நீத்தார்.