tamilnadu

img

போர்ட்பிளேரில் சிஐடியு மாபெரும் வெற்றிப் பேரணி

பெங்களூரு மாநாட்டில் பங்கேற்ற சிஐடியு தலைவர்கள் பெருமிதம்

பெங்களூரு/போர்ட் பிளேர், ஜன. 25 - அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் உள்ள தொழிலாளர்களின் நலன்காப்ப தில் சிஐடியு மகத்தான போராட்டங்களை நடத்தி வருகிறது; சமீபத்தில் தொழிலா ளர்களின் நலன்களை பாதுகாக்கும் தீர்ப்புகளையும் பெற்றுள்ளது. இதன் மூலம் அந்தமான்-நிக்கோபார் தீவுகளின் தொழிலாளர்களது பாதுகாப்பு அரணாக சிஐடியு விளங்கி வருகிறது என பெரு மிதத்துடன் குறிப்பிட்டனர் அம்மாநில சிஐடியு பொதுச் செயலாளர் பி.சந்திர சூடன் மற்றும் செயலாளர் ஆனந்த் ராஜன் ஆகியோர். பெங்களூரில் நடைபெற்ற சிஐடியு அகில இந்திய மாநாட்டில் அந்தமான் -நிக்கோபார் தீவுத் தொழிலாளர்களின் சார்பில் பிரதிநிதிகளாக பங்கேற்ற அவர்கள் தீக்கதிருக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:

அந்தமான்-நிக்கோபார் தீவுகளில், ஒன்றிய அரசின் நிறுவனங்களில் (APWD) அவுட்சோர்சிங் முறையில் தொழிலாளர்கள் பணியாற்றிவரு கின்றனர்.இவர்களை தினக்கூலி தொழிலாளர்களாக அங்கீகரித்து ஒன்றிய அரசின் குறைந்த பட்ச மாத ஊதியம் ரூ. 18000 மும், அத்துடன் டிஏ, சேர்த்து மாதம் 30 நாட்களுக்கு பிரித்து தினக்கூலியாக வழங்கவேண்டும் என 2015-ஆம் ஆண்டு முதல் சிஐடியு தொழி லாளர்களை திரட்டி தொடர்ந்து  போராடி வந்தது. பின்னர் அவுட்சோர்சிங் தொழிலாளர் களை தினக்கூலி தொழிலாளர்களாக அடையாளம் கண்டு பணிநிரந்தரம் செய்யவேண்டும் என வலியுறுத்தி சிஐடியு சார்பில் 2018-ஆம் ஆண்டு கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில்,   2019-ஆம்‌ஆண்டு அவுட்சோர்சிங்கில் இருந்து தினக்கூலி தொழிலாளர்களாக அடையாளம் கண்டு இவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ. 18000த்துடன், டிஏ வை இணைத்து மாதம் 30 நாட்களுக்கு பிரித்து வழங்க வேண்டும் என கொல்கத்தா உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஒன்றிய அரசின் நிறுவனங்கள் மேல்முறையீடு செய்தன. இவ்வழக்கை கொல்கத்தா உயர்நீதிமன்றம் விசார ணைசெய்துவந்த நிலையில், ஒன்றிய அரசின்  நிறுவனங் கள் விசாரணைக்கு வராமல் இழுத்தடித்து வந்தன. இந்நிலையில் உயர்நீதிமன்ற பெஞ்ச் விசாரணைக்கு  ஒத்துழைக்க மறுத்த ஒன்றிய அரசு நிறுவனங்கள், சிஐ டியு தொழிற்சங்கத்திற்கு ரூ.1 லட்சத்து 77 ஆயிரம் அபராதத் தொகையை வழங்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும்; தினக்கூலி தொழிலாளர்களை வரை யறுக்க வேண்டும்; இத்தொழிலாளர் களை பணி நிரந்தரப்படுத்த 3 மாதத்திற் குள் சிஐடியு தொழிற்சங்க தலைவர் களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என மகத்தான தீர்ப்பினை கொல்கத்தா உயர்நீதிமன்றம் சமீபத்தில் வழங்கியுள்ளது. இந்த  தீர்ப்பினால் 10,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயனடைகிறார்கள்.

மேலும் தினக்கூலி தொழிலாளர் களுக்கு அவர்களுடைய சர்வீசை கணக்கில் கொண்டு இபிஎப் பிடித்தம் செய்ய வேண்டும்; தொழிலாளர்களுக்கு அரியர்ஸ் வழங்கவேண்டும் என சிஐடியு தொழிற்சங்கம் கொல்கத்தா உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது.இவ்வழக்கை விசாரித்துவந்த நிலையில் 2022 டிசம்பர் மாதம் வழங்கிய நீதிமன்ற தீர்ப்பில் தொழிலாளர்களுக்கு இபிஎப் பிடித்தம் செய்ய நிறுவனங்கள், இபிஎப்  துறையிடன் பேச்சுவார்த்தை நடத்தி  பிடித்தம் செய்வதற்கான நடவடிக்கை களை எடுக்கவேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்தமான்-நிக்கோபார் தீவுகளில்  உள்ள தொழிலாளர்களின் நலனுக்காக வும்தொழிலாளர்களை பாதுகாக்கவும், சிஐடியு களத்திலும், சட்ட போராட்டத்திலும் மாபெரும் வெற்றிகண்டுள்ளது.  சிஐடியு தொழிலாளர்களின்  நம்பிக்கை நட்சத்திர மாக திகழ்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேற்கண்ட தீர்ப்பு தொடர்பாக அந்த மான் தலைநகர் போர்ட் பிளேரிலிருந்து தீக்கதிரிடம் பேசிய சிஐடியு தலைவர்களில் ஒருவரான எஸ்.பி.காளைராஜன், அந்த மான்-நிக்கோபார் தீவுகளின் பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்காக சிஐடியு போராடிப் பெற்ற இந்தத் தீர்ப்பு, தொழிலாளர்கள் மத்தியில் பெரும் உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இதுதொடர் பான வழக்குகள் நடைபெற்ற சமயங் களில் இந்த வழக்கினை சீர்குலைக்க ஒன்றிய பாஜக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டது.  ஒன்றிய பாஜக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர், கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் தில்லியிலிருந்து காணொலி மூலமாக வாதாடி தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்காமல் இருக்க முயற்சி மேற்கொண்டார். மேலும் தொழிலாளர் ஒற்றுமையை உடைத்து, பொதுத்துறை நிறுவனங் களில் பல சங்கங்கள் இருப்பதாக காட்டி,  தொழிலாளர்களுக்கு ஆதரவான தீர்ப்பு  வராமல் வழக்கினை இழுத்தடிக்க முயற்சி  மேற்கொண்டன. எனினும் சிஐடியு தரப்பில் வலுவான வாதங்கள், உறுதி யான போராட்டங்கள் இறுதியில் வெற்றி பெற்றன என்று கூறினார்.

போர்ட்பிளேரில் வெற்றிப்பேரணி

இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக ஜனவரி 16 அன்று அந்தமான் தலைநகர் போர்ட்பிளேரில், அந்தமான்-நிகோபார் தீவுகள் அனைத்திலுமிருந்து பல நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் குவிந்தனர். வரலாற்றுச் சிறப்புமிக்க மூவர்ண பூங்காவிலிருந்து பேரணி துவங்கி அபர்பனடின் பஜார் வழியாக மீண்டும் பூங்காவை அடைந்து மாபெரும் வெற்றிவிழா பொதுக்கூட்டம் நடை பெற்றது. சிஐடியு மாநில பொதுச் செயலாளர் பி.சந்திரசூடன் தலைமையில் நடைபெற்ற இப்பேரணி-பொதுக்கூட்டத்தில் மாநில தலைவர் ஆர்.சுரேந்திரன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் டி.ஐயப்பன், செயலாளர்கள் எஸ்.பி.காளைராஜன், சிப்ரா பாலா , எம்.வி.யுகாந்தர் மற்றும் எம்.பூமிநாதன், பி.சி.பட்டாச்சார்யா, என்.பி.கே.நாயர், சத்யபால், ஆனந்தராஜன் உள்ளிட்ட சிஐடியு தலைவர்கள் உரையாற்றினர்.