போர்ட் பிளேயர், மார்ச் 20- மக்களவைத் தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அந்தமான் நிகோபார் தொகுதி வேட்பாளராக டி. அய்யப்பன் போட்டியிடுகிறார். இவர் கட்சியின் மாநில அமைப்புக்குழு செயலாளராக வும், சிஐடியு துணைத் தலைவராகவும் உள்ளார். தில்லி பல்கலைக்கழக சட்டப் படிப்பையும், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலை பட்டத்தையும் பெற்ற அய்யப்பன் அரசுப் பணியில் இருந்து ஓய்வுபெற்று, அரசியலில் முழு நேரமும் மக்கள் பணியாற்றி வருபவர் ஆவார். அந்தமான் அரசு அதிகாரிகள் சங்கத்தின் உதவிப் பொதுச் செயலாளராக பணியாற்றியுள்ளார். அந்தமான் - நிகோபார் தீவுகளில் நகராட்சி தொழி லாளர்கள் உட்பட அனைத்துப் பகுதி தொழிலாளர்கள் நலன்களைக் காக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் சிஐடியு தொழிற்சங்கமும் ஏராளமான போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றன. மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் தொடர்ந்து போராடி தொழிலாளர் உரிமைகளை பெற்றுத் தந்துள்ளன. இப்போராட்டங்களுக்கு தலைமையேற்ற டி.அய்யப்பன், அந்தமான் மக்களிடையே அறியப்பெற்ற தலைவராவார்.