tamilnadu

img

பாமக தலைவரானார் அன்புமணி ராமதாஸ்

சென்னை, மே 28 - பாட்டாளி மக்கள் கட்சிக்கு மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைவராக தேர்ந்தெடுக் கப்பட்டார்.  பாமக தலைவராக 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய ஜி.கே.மணிக்கு சமீபத்தில் கட்சி சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதையடுத்து கட்சிக்கு புதிய  தலைவரை தேர்வு செய்ய சிறப்பு பொதுக்குழு  கூட்டம் சென்னை அருகே திருவேற்காட்டில் மருத்துவர் ராமதாஸ் முன்னிலையில் நடை பெற்றது. ஜி.கே.மணி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மருத்துவர் அன்பு மணி ராமதாஸ் தலைவராக தேர்வு  செய்வதற்கான தீர்மானம் முன்மொழியப் பட்டது.  தீர்மானத்தை ஜி.கே.மணி  வாசித்தார். வேறு யாரும் போட்டியிட வில்லை. இதனையடுத்து, பாமக தலைவ ராக அன்புமணி ராமதாஸ் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தனர்.