tamilnadu

img

நூறு சுடர்கள் குமரியில் சங்கமம்

கன்னியாகுமரி, நவ. 3- கன்னியாகுமரியில் நவம்பர் 4 (இன்று) முதல் 6 வரை நடைபெறும் இந்திய தொழிற் சங்க மையத்தின் (சிஐடியு) 15 ஆவது  தமிழ்நாடு மாநில மாநாட்டிற்கு கட்டியம்  கூறும் விதமாக,  குமரி  மாவட்டத்தில் உழைப்பாளி மக்களை அணிதிரட்டவும் உரிமைகளை வென்றெடுக்கவும் போராட்ட களங்கள் அமைத்த முன்னோடிகளின் நினைவாக கொண்டு வரப்பட்ட நூறு  சுடர்கள் முக்கடல் சந்திக்கும் குமரி முனையில் சங்கமித்தன.   இந்திய தொழிற்சங்க மையத்தின் ஸ்தாபக தலைவர்களான தோழர்கள் ஜே.ஹேமச்சந்திரன், ஜி.எஸ்.மணி, டி.மணி மற்றும்  பி.பெருமாள், பி.திவாகரன், திரு வட்டார் எம்.கிருஷ்ணன் உள்ளிட்ட தொழிற்சங்க முன்னோடிகளின் நினைவாக நூறு சுடர்கள் எடுத்துவரப்பட்டன. வியாழ னன்று (நவ.3) நடந்த துவக்க நிகழ்ச்சி களில் அவர்களது நினைவுகளை சுமந்தபடி  உறவினர்களும் சிஐடியு நிர்வாகிகளும், பொதுமக்களும் பங்கேற்றனர். சிஐடியு மாநிலத் தலைவராக நீண்ட காலம் செயலாற்றிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஹேமச்சந்திரன் நினைவுச்சுடர் மாத்தூரில் உள்ள அவரது நினைவிடத்திலிருந்து எடுத்துவரப்பட்டது.

தோழர்கள் ஜி.எஸ்.மணி, டி.மணி ஆகி யோரது நினைவுச் சுடர்கள் வெட்டு வெந்தியில் உள்ள அவர்களது நினை விடத்திலிருந்தும், தென்தாமரை குளத்தில்  இருந்து தோழர் பி.பெருமாள், செறு கோலில் இருந்து தொழர் பி.திவாகரன் நினைவுச்சுடர்களும் கொண்டுவரப்பட்டன. இதுபோல் தோட்டத் தொழிலாளர்களை அணிதிரட்டிய தோழர் திருவட்டார் எம்.கிருஷ்ணன், பொன் வசந்தன், எம்.எம்.அலி, துளசிதரன், செபஸ்டியன், சிலுவை,  பிளாரன்ஸ், டி.ஆர்.மேரி உள்ளிட்ட தலைவர்களின் நினைவிடங்களிலிருந்து சுடர்கள் கொண்டு வரப்பட்டன. அலைகள் தாலாட்டும் குமரி முனை யில் கம்பீரமாக எழுந்து நிற்கும் திருவள்ளு வர் சிலைக்கு நேராக அமைக்கப் பட்டிருந்த மேடையில் நூறு தியாகச்சுடர்களும் சங்க மித்தன. அவற்றை சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தர ராசன், பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், பொருளாளர் மாலதி சிட்டிபாபு, மாநில  நிர்வாகிகள் எஸ்.கண்ணன்,  வி.குமார், க.திருச்செல்வன், கே.சி.கோபிகுமார், தனலட் சுமி, கிருஷ்ணமூர்த்தி, சந்தி ரன் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.

கருத்தரங்கம்

தியாகிகள் நினைவுச் சுடர் சங்கமத்தைத் தொடர்ந்து நடந்த கருத்தரங்கம் பரிச ளிப்பு நிகழ்ச்சிக்கு வர வேற்புக்குழு தலைவர் ஜி. செலஸ்டின் தலைமை வகித்தார். அய்யா வை குண்டர் மகாசன்னிதானம் பாலபிரஜாபதி அடிகளார், திரைக்கலைஞர் ரோகிணி, சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன், எம்.ஐடா ஹெலன், எம்.சித்ரா உள் ளிட்டோர் பேசினர். இதில் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.நூர் முகமது, க.கனகராஜ், மாவட்ட செயலாளர் ஆர். செல்லசுவாமி, மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.லீமா றோஸ், சிஐடியு மாவட்ட தலைவர்.பி.சிங்காரன், செயலாளர் கே.தங்க மோகன், உள்ளிட்ட மாநில, மாவட்ட தலைவர்கள் பங் கேற்றனர். முன்னதாக சேலம் கலைக்குழுவினர் நடத்திய நிகழ்ச்சிகளை ஏராளமான சுற்றுலா பயணிகளும் பொது மக்களும் கண்டு ரசித்தனர்.