ஓவியர் கே.மாதவன் நற்பணி மன்றம் சார்பில் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஓவியக் கண்காட்சி ஏப்ரல் 12ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஓவியர்கள் கே.மாதவன், ஆர்.நடராஜன் ஆகியோர் வரைந்த 500க்கும் மேற்பட்ட ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. இதனை ஏராளமான கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.