tamilnadu

img

அமித்ஷா வருகை: புதுவையில் கடும் எதிர்ப்பு!

புதுச்சேரி,ஏப்.24- மொழிவாரி மாநிலங்களில் இந்தி யை திணிக்கும் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் வருகைக்கு மதச்சா ர்பற்ற கட்சிகள் சார்பில் புதுச்சேரியில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பன்முகத்தன்மை கொண்ட இந்தி யாவில், அனைத்து மாநிலங்களிலும் இந்தி கட்டாயம் இருக்க வேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதற்கு தமிழ்நாடு மட்டு மின்றி புதுச்சேரியிலும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதே போல் நீட் தேர்வு, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை முடக்குவது, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டம் நடந்து வருகிறது.  மேலும், புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதி அளித்தபடி மாநில அந்தஸ்தும் வழங்க வும் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வில்லை. ஒன்றிய அரசின் நிதிக்குழுவில் புதுச்சேரியை  சேர்க்கவில்லை. புதுச் சேரிக்கு தேவையான நிதியும் ஒதுக்குவ தில்லை. 

கருப்புக்கொடி

இந்த நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஞாயிற்றுக்கிழமை (ஏப். 24) புதுச்சேரிக்கு வந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாரம் ஜீவானந்தம் சிலை எதிரில்  மதச்சார் பற்ற கட்சிகள் சார்பில் கருப்புக் கொடி களுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி யின் பிரதேச தலைவர் சுப்பிரமணியன், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர்கள் விசுவநாதன், கமலக்கண்ணன், சட்டமன்ற உறுப்பி னர் மு.வைத்தியநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலா ளர் ஆர்.ராஜாங்கம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச செயற்குழு உறுப் பினர்கள் வெ.பெருமாள், ராமச்சந்தி ரன், தமிழ்ச்செல்வன், சீனிவாசன், கொளஞ்சியப்பன், சத்தியா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் சலீம்,நிர்வாகிகள் நாரா.கலை நாதன்,கீதநாதன், விடுதலைச் சிறுத்தை கள் கட்சியின் அமைப்புச் செயலாளர் தேவ.பொழிலன், மார்க்சிஸ்ட் லெனி னிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலசுப்புரமணியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

பலூன்கள் பறிமுதல்

இந்த போராட்டத்தில் பங்கேற்ற வர்கள் “கோ பேக் அமித்ஷா”  என்ற  வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை யும் கருப்புக் கொடியும் ஏந்திவந்தனர். புதுச்சேரி பிள்ளைத் தோட்டம் பகுதி பெரியார் சிலை எதிரில், கருப்புக் கொடிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழ கத்தினர் கையில் இருந்த கருப்பு கொடி களையும் கருப்பு பலூன்களையும் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக பறிமுதல் செய்தனர்.

விதிகளை மீறிய பாஜக!

புதுச்சேரியில் கட் அவுட், பேனர் வைக்க தடைச்சட்டம் உள்ள நிலையில், எல்லைப்பிள்ளைச்சாவடியிலுள்ள போக்குவரத்து சிக்னலை மறித்தும் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பி னர்களும் பாஜக தலைவர்கள் நிர்வாகி கள் அமித்ஷா படத்துடன் ராட்சத ‘கட் அவுட்’, பேனர்களை வைத்திருந்தனர். இதேபோல் புதுச்சேரி நகரப் பகுதிகளி லும் சாலைகளை மறித்தும் பேனர்களை  வைத்து பொது மக்களுக்கு இடையூறு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.