tamilnadu

img

சமூக நீதியை, மனித உரிமையை உரத்துப் பேசும் தீக்கதிர்

பால்வளத்துறை அமைச்சர் மனோ. தங்கராஜ் பாராட்டு

திருநெல்வேலி, செப்.23- கருத்துச் சுதந்திரத்திற்கு எப்போதெல்லாம் ஆபத்து வருகிறதோ அப்போதெல்லாம் ஜனநாய கமும் ஆபத்திற்குள்ளாகும். இன்றைக்கு நாடும் ஜனநாயகமும் ஆபத்தில் சிக்கியுள்ளன. 2024-தேர்தலில் பாஜக-ஆர்எஸ்எஸ் கூட்டத்தை தோற்கடிப்பதன் மூலமே ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியுமென தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ.தங்கராஜ் பேசினார். தீக்கதிர் திருநெல்வேலிப் பதிப்பு தொடக்க விழாவில் பங்கேற்று முதல் இதழைப் பெற்றுக் கொண்டு அவர் பேசியதாவது:- பொதுவுடைமைச் சிந்தனைகளின் மீது எனக்கு தாக்கம் அதிகம். கன்னியாகுமரி மாவட்ட இடதுசாரி இயக்கத் தலைவர்களோடு நான் நெருக்கமாக இருப்பேன். எனது நண்பர்கள் கூட நீங்கள் என்ன கம்யூனிஸ்ட்டா எனக் கேட்பார்கள். எனது நெருக்கத் திற்குக் காரணம் அதன் கொள்கைகள் தான். கொள் கைகளே என்னை ஈர்ப்பாளனாக மாற்றியுள்ளது.

பொதுவுடைமையும்...  திராவிட இயக்கமும்...

கேரளத்தில் பொதுவுடைமைச் சித்தாந்தமும், தமிழகத்தில் திராவிட இயக்கச் சித்தாந்தமும் தான் இந்திய அளவில் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலிரண்டு இடத்தில்  கேரளமும், தமிழகமும் இருப்பதற்குக் காரணம். மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டிகளாக இந்த இரண்டு மாநிலங்களும் உள்ளன. திருநெல்வேலிப் பதிப்பு தொடக்க விழா நிகழ்வில் நான் பங்கேற்க வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். உண்மையிலேயே இந்த நிகழ்வில் பங்கேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.  இன்றைய சூழலில், சோசலிசம், ஜனநாயகம், மதச்சார்பின்மை கேள்விக்குறியாகி உள்ளது. பத்திரிகை சுதந்திரமும் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. மோடி ஆட்சியில் பல பத்திரி கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அந்த வழக்கு கள் எல்லாம் என்னவானது எனத் தெரியவில்லை.

வெறுப்பு பிரச்சாரமும்  ரேட்டிங் என்ற பொய்யும்

கருத்துச் சுதந்திரத்திற்கு எப்போதெல்லாம் ஆபத்து வருகிறதோ அப்போதெல்லாம் ஜனநாயக மும் ஆபத்திற்குள்ளாகும். இன்றைக்கு பல ஊடகங்கள் பாசிச சக்திகளுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றன. வெறுப்புப் பிரச்சாரத்தை மேற்கொள்கின்றன. சமூகத்தைப் பற்றியோ, ஊடக பொறுப்புணர்வு பற்றி யோ அவர்கள் கவலைப்படுவதில்லை. கேட்டால் “ரேட்டிங்” என்ற வார்த்தையைக் கூறி நழுவிக் கொள்கிறார்கள்.

பக்குவமும்...தைரியமும் 
தீக்கதிர் சமூக நீதியை, மனித உரிமை மீறல்களை, அரசுகள் செய்யும் தவறுகளை, அதிகாரிகள் செய்யும் தவறுகளை பக்குவமாகவும் தைரிய மாகவும் எடுத்துச் சொல்லி வருகிறது.

ஏழைகள் என்றால் ஏளனமா?

ஏழைகளுக்கு இலவசமே கொடுக்கக்கூடாது என்கிறார் பிரதமர் மோடி, ஆனால், அதானிக்கும் அம்பானிக்கும் இலவசங்களை சந்தோஷமாக அள்ளிக்கொடுக்கிறார்.  நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கொடுக்கப் பட்டுள்ள கையேட்டில், “சமதர்மம், மதச்சார் பின்மை” என்ற சொற்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்த சொற்கள் இருக்கக்கூடாது என்பது தான் பாஜக-ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தின் அடிப்படை நோக்கம். 2024-ஆம் ஆண்டு மோடி மீண்டும் வெற்றி பெற்றால் பாசிசமும் அடக்குமுறையும் தான் மிஞ்சும். உரிமைகளற்ற சமுதாயமாக மனித சமூகம் மாற்றப்படும்.

பிரதமரின் பித்தலாட்ட அரசியல்

சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்தில் பெண்க ளுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா நிறை வேற்றப்பட்டுள்ளது. இது “பித்தலாட்டம், அரசியல் விளையாட்டு”. இட ஒதுக்கீடு உடனடியாக அமலாகாது. 2029-ஆம் ஆண்டு தான் அமலாகும். பொதுவுடைமை, சமூகநீதி, மதச்சார்பின்மை, மக்கள் ஒற்றுமை பாதுகாக்கப்படுவதற்கு பாசிச பாஜக-ஆர்எஸ்எஸ் கூட்டத்தை இந்தியாவிலிருந்து வேரோடு பிடுங்கி எறிய வேண்டும். வருகிற 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் நாம் அனைவரும் இணைந்து செயல்பட்டு வெற்றி  பெறுவோம். தீக்கதிர் பணி சிறக்க வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.