tamilnadu

உலகச் செய்திகள்

அமெரிக்க நாடுகளின் சங்கத்தின் அமெரிக்க நாடுகள் ஜனநாயக சாசனத்தை நடைமுறைப் படுத்த வேண்டிய நேரம் வந்திருக்கிறது என்று பெரு நாட்டின் ஜனாதிபதி காஸ்டில்லோ வலியுறுத்தியி ருக்கிறார். மக்களின் அரசைக் கவிழ்க்கும் நோக்கத்து டன் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன என்று எச்சரிக்கும் அவர், மற்ற நாடுகளின் உதவி கலகக்காரர்களுக்கு கிடைக்காமல் செய்ய, ஜன நாயக சாசனத்தை நடைமுறைப்படுத்துவது அவசியம் என்று அவர் கூறியிருக்கிறார்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினோ பசோவில்  அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்கு ராணு வத்தின் தலைமையிலான ஆட்சி தொடரவிருக்கிறது. கலகம் நடத்தி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்ட ராணுவ அதிகாரியான பால் டமிபா ஜனாதிபதியாக வும் பொறுப்பேற்றுக் கொண்டார். தற்போது தனது தலைமையிலான ஆட்சி மேலும் மூன்று ஆண்டு களுக்குத் தொடர்வதற்கான அரசாணையில் கையெழுத்திட்டிருக்கிறார்.

ஈரானுடனான உறவு தொடர வேண்டும் என்றும், குறிப்பாக பிராந்திய ரீதியான பிரச்சனை களில் இரு தரப்பு ஆலோசனைகள் தொடர்வது அவசியம் என்றும் சிரியாவின் ஜனாதிபதி பஷர் அல் அஸ்ஸாத் கூறியுள்ளார். சிரியாவின் டமாஸ்கசில் ஈரான் அதிகாரிகள் சிலரைச் சந்தித்துப் பேசுகையி லேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். சிரியாவைத் தனிமைப்படுத்தும் முயற்சிகளை மேற்கத்திய நாடு கள் செய்கின்றன என்றும், அதை ஈரான் அனுமதிக் காது என்றும் ஈரான் அதிகாரிகள் உறுதியளித்தனர்.