குழந்தைகளுக்குக் கதை சொல்வது மட்டுமல்லாமல் குழந்தைகளே கதை சொல்வதும் காலங்காலமாக நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. குழந்தைகள் வளர வளர பெரும்பாலான கதைகள் மறந்துவிடும். சின்ன வயசுல என் பிள்ளை எத்தனை கதை சொல்லும் தெரியுமா என்று பின்னாட்களில் சொல்லாத பெற்றோர் இல்லை. சிறு வயதில் சொன்ன பலவிதமான கதைகள் நினைவுக்கு வராததை எண்ணி ஏங்காதோரும் இல்லை. இன்று குழந்தைகளுடைய கதைகளையும் பாட்டுகளை யும் புத்தகமாகவும், காணொலியாகவும் பதிவு செய்து வெளி யிடுவது சிறிய அளவிலேனும் ஆங்காங்கே தொடங்கியிருக் கிறது. குழந்தைகளிடமிருந்து ஒரு தடவைதான் கதை கேட்டுப் பதிவு செய்ய முடியும். ஏனென்றால் ஒரு குழந்தை இரண்டாவ தாக ஒரு கதை சொல்கிறது என்றால் அது இரண்டாவது புதிய கதையாகத்தான் இருக்குமேயன்றி,
இரண்டாவது தடவை சொன்ன கதையாக இருக்காது! ஐந்து வயது முதல்வன் தானே சொல்லி, தானே மாற்றிய நான்கு குட்டிக்குட்டிக் கதைகள் தொகுக்கப்பட்டு ‘பறக்கும் பழங்கள்’ என்ற புத்தகமாக வந்துள்ளது. சுருக்கமான முன்னுரையில் சிறார் எழுத்தாளர் விழியன் கூறியிருப்பது போல, ஒவ்வொரு கதை முடிவிலும் நிச்சயமாக ஒரு புன்னகை நிகழும். ஒரு குதிரையின் முதுகில் தொங்கியபடி சவாரி செய்யும் வாய்ப்பு ஒரு தேங்காய்க்கும் ஆப்பிள் பழத்துக்கும் கிடைக் கிறது. பறப்பது போலிருந்த அந்த வேகமான சவாரி பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று என்று கேட்டுக்கொண் டும் தகவல் பரவி, மறுநாள் எல்லாப் பழங்களும் கூடி, தாங்க ளும் பறக்க வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்து கின்றன. அந்த ஆசை நிறைவேறியது எப்படி? புத்தகத்தின் தலைப்பாக வந்துள்ள இக்கதை உயிரினங்களின் அன்புலகத்தையும் காட்டுகிறது. மழைக்காக ஒரு குகையில் ஒதுங்குகிறது ஒரு மான் குட்டி. அதுவோ ஒரு புலியின் குகை. சிறிது நேரத்தில் புலி உறுமியபடி வந்துவிடுகிறது.
நடுக்கத்துடன் இருக்கும் மான்குட்டியிடம், “உன் பேரென்ன” என்று புலி கேட்க, “உன் பேரென்ன” என்று குட்டி திருப்பிக் கேட்கிறது. அதன் பின் நடப்பது ‘குட்டிமான்’ கதையின் சுவையான திருப்பம். ஈ மொய்க்கும் பொருள்களைப் பெருக்கித்தள்ளப் பயன் படுவது துடைப்பம். அப்படியொரு துடைப்பமும் ஈயும் நண்பர் கள். அந்த நட்பில் ஒரு பிணக்கு ஏற்பட இருவரும் பேசிக்கொள்வ தில்லை. இடையில் ஒரு கொசு சேர்ந்துகொள்கிறது. பிணக்கு ஏற்பட்ட காரணமும், அது சரியாவதும் அந்த மூன்றையும் போலவே கடைசியில் நம்மை “ஹாஹாஹா” என்று சிரிக்க வைக்கின்றன. துடைப்பம், ஈ, கொசு போன்றவற்றின் மீது அருவருப்பு உணர்வு படியாத குழந்தை மனசைக் காட்டுகிறது “ஈயும் வௌக்கமாறும்’ கதை. மொட்டை மாடியில் மழைத் தூறலை ரசித்துக்கொண்டி ருக்கிறாள் அழகு மூக்கி பாப்பா. திடீரென வீசும் சூறாவளிக் காற்றில் அவளுடைய மூக்கும் உடலின் மற்ற உறுப்புகளும் பிய்ந்து தனித்தனியே பறக்கின்றன.
அங்கே வருகிற ஒரு மயிலின் துணையோடு அந்த உறுப்புகள் தாறுமாறாக இடம் மாறியும் பின்னர் சரியான இடங்களிலும் பொருந்துவதைச் சொல்கிறது ‘உறுப்புகள் மீண்ட கதை” ஆகா, என்னவொரு கற்பனை வளம் என்று வியக்க வைக்கிறது அந்தக் கதை. சில மேடைகளில் ஒருவர் கதை சொல்ல, வேறு சிலர் நடித்துக்காட்டுவார்கள். அது போல் அமைந்துள்ளன குழந்தைகள் ஹரிதா, அன்பு மாறன் வரைந்துள்ள அட்டைப் படங்களும், கயல் ஜெ.சி., அ. முத்துமாறன், ஸ்ரீ. ஷ்ரேஷ்டா ஸ்ரீ வழங்கியுள்ள உள் ஓவியங்களும். நல்ல தரமான தாள், போதிய இடைவெளியுடன் வரிகள் என புத்தகத்தைக் குழந்தைகள் விரும்பிப் படிக்கிற வகையில் தயாரித்துள்ளனர் நம் கிட்ஸ் பதிப்பகத்தார். பதிப்பாள ராகிய கவிஞர் இவள் பாரதி, பெற்றோர்கள் தங்கள் குழந்தை களுக்குச் செய்யக்கூடியது என்ன என்று வழிகாட்டுகிறவர் களின் வரிசையில் இணைகிறார். பெரியவர்களும் பதிப்பாளர் களும் இதற்கொரு முன்னுரிமை அளிப்பது சிறார் இலக்கிய வளர்ச்சிக்கு உதவிகரமாக அமையும். ஏனெனில் குழந்தை களின் கதைக் கற்பனைத்திறன் வளர்ச்சி அவர்கள் தாங்கள் தேர்வு செய்யும் எந்தத் துறையிலும் சாதனைத்தடம் பதிக்க உதவும். பறக்கும் பழங்கள்-முதல்வன் : வெளியீடு; நம் கிட்ஸ் பதிப்பகம், மின்னஞ்சல் – namtamilmedia@gmail.com, தொடர்புக்கு – 9566110745, ISBN 978-81-953338-6-8, பக்கங்கள் 40 விலை ரூ.50