சென்னை, ஜூலை 25 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினரும், இன்சூரன்ஸ் ஊழி யர் சங்க மூத்த தலைவருமான தோழர் ஆர்.சந்தானம் ஞாயிறன்று (ஜூலை 24) காலமானார். அவருக்கு வயது 83. மெட்ராஸ் மோட்டார் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்திலும், அந்நிறுவனம் தேசியமயமாக்கப்பட்டு யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனமான மாறிய பிறகும் தொழிற்சங்க தலைவராக இருந்தார். இந்நிறுவனங்களில் சங்கம் வளர்ப்பதில் முன்னணியில் நின்றார். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் இணைச் செயலா ளராகவும், 20 ஆண்டுகள் பொது இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்கத்தின் நிலைக்குழு செயலாளராகவும் பணியாற்றினார். தொழிற்சங்க பணியின் காரணமாக பல்வேறு பதவி உயர்வுகள் தவறி போயின. அவசர நிலை காலத்திற்கு முன்பிருந்து இறுதி வரை கட்சி உறுப்பினராக செயலாற்றினார். உடல் நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி காலமானார்.
புறக்கணிக்க முடியாதவர்
கோடம்பாக்கத்தில் உள்ள அன்னாரது இல்லத்தில் வைக்கப்பட்டி ருந்த உடலுக்கு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் கூறுகையில், “பொது இன்சூரன்ஸ் அரங்கத்தில் சங்கத்தை உருவாக்கவும், நாடு முழுவதும் சென்று பலப்படுத்தவும் அயராது பாடு பட்டார். சென்னை நகர தொழிற்சங்க இயக்க வரலாற்றை எழுதும்போது, ஆர்.சந்தானத்தை புறக்கணிக்க முடியாது” என்றார். அன்னாரது உடலுக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் ஆர்.வேல் முருகன் (தென்சென்னை), ஜி.செல்வா (மத்தியசென்னை), மாநிலக்குழு உறுப்பினர் வெ.ராஜசேகரன், இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத் தலை வர்கள் கே.சுவாமிநாதன், சிவசுப்பிர மணியம், ஜெயராமன், மூத்த தலை வர்கள் நந்தகுமார், தரணிபதி, பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தென்மண்டல நிர்வாகிகள் அபினர் வித்தியாதீர்த்தன், அஸ்கர்உசேன், கிருஷ்ணா, நாகராஜ், கல்யாண சுந்தரம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத் தினர். இதனைத் தொடர்ந்து அன்னா ரது உடல் திங்களன்று (ஜூலை 25) கண்ணம்மா பேட்டை மயானத் தில் தகனம் செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளி யிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், “தொழிலாளி வர்க்க நலனுக்காக வாழ்நாளை அர்ப்பணித்தவர் தோழர் சந்தானம்” என்று தெரிவித்துள்ளார். சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.