சாலையோர வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு ஆணை
சென்னை மாவட்ட சாலையோர சிறுகடை விற்பனையாளர்கள் சங்கம் (சிஐடியு) மற்றும் விற்பனைக்கு குழு உறுப்பினர் முன்முயற்சியால் மாதவரம் மண்டலம் 27ஆவது வார்டுக்குட்பட்ட அருள் நகர் பிரதான சாலை, கணபதி நகர் பிரதான இணைப்பு சாலையில் வியாபாரம் செய்யும் 55 வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு ஆணை மண்டல அலுவலகத்தில் வழங்கப்பட்டது. இதில் மாநகராட்சி அதிகாரிகள் லோகநாதன், ஆல்பர்ட், குமார், விற்பனைக்குழு உறுப்பினர் ஜி.மோனிஷா, மாவட்டச் செயலாளர் டி.வெங்கட், கே.சி.ஏ.கருத்திருமன், ஏ.ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.