ஐரோப்பியக் கண்டத்தில் உள்ள கூட்டணி நாடு களுக்கு மேலும் படைகளை அனுப்ப அமெரிக்கா முடிவெடுத்துள்ளது. உக்ரைன் பெரும் ஆபத்தில் இருப்பதாகத் தொடர்ந்து பொய்ப்பிரச்சாரம் செய்து வரும் அமெரிக்கா, ஜெர்மனி, போலந்து மற்றும் ருமேனி யா ஆகிய ஐரோப்பிய நாடுகளில் கூடுதல் படைகளை நிறுத்தப் போகிறது. அமெரிக்க ராணுவச் செய்தித் தொ டர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், “உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கப் போகிறதா என்பது தெரியாது. ஆனால் படை யெடுக்கும் பலம் அவர்களிடம் உள்ளது” என்றார்.
மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான கோஸ்டா ரிகாவில் பிப்ரவரி 6 ஆம் தேதியன்று பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஜனாதிபதி, இரண்டு துணை ஜனாதிபதிகள் மற்றும் 57 நாடாளுமன்ற உறுப் பினர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். ஜனாதிபதிக்கான போட்டி மிகவும் கடுமையாக உள்ளது. கருத்துக் கணிப் பில் முதலிடத்தில் இருக்கும் ஜோஸ் மரியா பிகுரெஸ் 17 விழுக்காடு வாக்குகள் மட்டுமே பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட ஐந்து வேட்பாளர் கள் தலா பத்து விழுக்காடு வாக்குகளைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெனிசுலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ வுக்கு எதிரான கலகத் திட்டங்கள் அனைத் தும் அமெரிக்கா உளவுத்துறையான சிஐஏ மற்றும் அமெரிக்க அரசு மட்டத்திலான உயர் அதிகாரிகளுக்கு நன்றாகத் தெரியும் என்று வெனிசுலாவின் முன்னாள் ராணுவத் தளபதி கிளிவர் அல்கலா-கார்டோன்ஸ் கூறி யுள்ளார். கலகத்திற்குத் திட்டம் தீட்டியவர்களில் கார்டோன்சும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.