tamilnadu

img

வேலை இழப்பு நெருக்கடி நிலையில் விஷமத்தன செய்தியை பரப்புவதா?

திருப்பூர், ஜன.27-  திருப்பூரில் தொழில் நெருக்கடி யான சூழ்நிலையில், தொழி லாளர்கள் வேலை இழப்பை சந்திக்கக் கூடிய நிலையில், விஷமத் தனமான செய்திகளை பரப்புவோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பூர் அனைத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன. திருப்பூர் அனைத்து பனியன் தொழிற்சங்கங்கள் கூட்டம் ஜனவரி 27 வெள்ளிக்கிழமை அன்று எல்பிஎப் சங்க அலுவலகத்தில் ஜி. பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. ஜி.சம்பத் (சிஐடியு), என்.சேகர் (ஏஜடியுசி), சு.பூபதி (எல் பிஎப்), பி.விஸ்வநாதன் (ஏடிபி),  ஏ.பெருமாள் (ஐஎன்டியுசி), மு.சம்பத், மு.மனோகரன் (எம்எல் எப்) ஆர்.முத்துசாமி (எச்எம்எஸ்) ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தின் முடிவில் வெளி யிடப்பட்ட செய்தி அறிக்கை வருமாறு: 

திருப்பூரில் கடந்த இரண்டு நாட்களாக காட்சி ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் இந்தி மற்றும் தமிழ் தொழிலாளர் மோதிக் கொள்வது போன்ற வீடியோ காட்சி பரப்பப்பட்டு வருகிறது.  இந்த சம்பவம் ஜனவரி 14 அன்று வேலம்பாளையம் காவல் நிலையத்துக்குட்பட்ட திலகர் நகர் பகுதியில் நடந்ததாகும். ஒரு டீக்கடையில், சமூக விரோதிகள் சிலர் குடிபோதையில் சிகரெட் பிடித்து, புகையை, அருகிலிருந்த ஒரு இந்தி பேசும் தொழிலாளி முக த்தில் ஊதியுள்ளனர். இதனைத் தட்டிக் கேட்ட அவரை அடித்துள்ளனர். அடிபட்ட நபர் ஓடிப்போய் தன்னோடு தங்கியுள்ள தொழிலாளி களோடு வந்து, எதிர்த்தாக்குதல் நடத்தியுள்ளார். சமூக விரோதி களும் தங்கள் தரப்பு ஆட்களை சேர்த்துக் கொண்டு, மோதலை திட்டமிட்டு ஏற்படுத்தியுள்ளனர்.  உடனடியாக காவல்துறை தலையிட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், காவல்துறை பிரச்சனையின் தீவிரத்தை உணரா மல் மெத்தனப்போக்குடன் சமரசம் செய்து வைத்துள்ளனர். மேலும் சமீப காலங்களில் காவல் துறை யின் ஒரு பகுதியினர் சமூக விரோதி களுக்கு இசைவாக செயல்படுவ தும் கண்டனத்திற்கு உரியதாகும்.  தற்போது உண்மைக்கு மாறாக, தமிழ்த் தொழிலாளர்களை, இந்தித் தொழிலாளர்கள் தாக்குவது போன்ற விசமத்தனமாக செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. 

ஏற்கனவே தொழில் நெருக்கடி யில் தொழிலாளர்கள் வேலை யிழப்பு ஏற்பட்டு இருக்கிற நிலை யில், இது போன்ற செய்திகளை திட்டமிட்டு பரப்புவது திருப்பூர் நகரத்தின் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துவதாகும்.  பத்திரிகைகளும், ஊடகங் களும் உண்மை நிலையை கண்ட றிந்து செய்திகள் வெளியிட வேண்டும் என தொழிற்சங்கங்கள் கேட்டுக் கொண்டுள்ளன. எனவே, மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் சம்பந்தப்பட்ட நபர்களை கண்டறிந்து உரிய நட வடிக்கை எடுப்பதன் மூலம் பொது அமைதியை பாதுகாத்திடவேண்டும்.  இவ்வாறு அனைத்து பனியன் தொழிற்சங்கங்கள் கேட்டுக் கொண்டுள்ளன. 

காவல்துறை அறிக்கை 

இந்நிலையில், திருப்பூரில் புலம்பெயர்ந்த வடமாநில தொழி லாளர்கள் கும்பலாக சேர்ந்து  கொண்டு உள்ளூர் தொழிலாளர் களை தாக்குவதாக சமூக ஊட கங்களில் பகிரப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது என்று மாநகர காவல் துறை கூறியுள்ளது. திருப்பூர் மாநகர காவல் துறை  சார்பில் வெள்ளிக்கிழமை வெளி யிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், நடந்த சம்பவம் தொழில் போட்டி யோ, வேலை வாய்ப்பு சம்பந்த மாகவோ, முன் விரோதம் காரண மாகவோ ஏற்பட்ட பிரச்சனை அல்ல; தற்செயலாக இரு நபர்களும் அவர்களது நண்பர்களுக்கும் ஏற்பட்ட பிரச்சனை என்று தெரிய வருகிறது. இருப்பினும் இது சம்பந்தமாக முழுமையான விசார ணை நடத்தி நடவடிக்கை எடுக்கப் படும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. ஜனவரி 14 அன்று நடைபெற்ற சம்பவத்தை 26-ஆம் தேதி நடந்த தாகவும், பனியன் கம்பெனியில் வேலை செய்யும் தமிழர்களை வட இந்தியர்கள் விரட்டுவதாகவும் சமூக வலைதளங்களில் தவறாக பகிரப்பட்டு வருகிறது என்று மாநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.