பி.எஸ்.சி, எம்.எல்.டி. பயிற்சியை அனைத்து மருத்துவக் கல்லூரியில் துவக்க வேண்டும் உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கத்தின் சார்பில் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் நடைபெறும் கையெழுத்து இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் நாகை மாலி, எம்.சின்னதுரை ஆகியோர் துவக்கி வைத்தனர். இதற்கு ஆதரவு தெரிவித்து மக்களவை உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன் கையெழுத்திட்டார்.