tamilnadu

img

அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க தேசிய மாநாடு நிறைவு

அகில இந்தியத் தலைவராக ஏ.விஜயராகவன்,  பொதுச்செயலாளராக பி.வெங்கட், துணை தலைவராக ஏ.லாசர் தேர்வு!

தோழர் ஜோதிபாசு நகர் (ஹௌரா), பிப்.19-  அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத் தின் தேசிய மாநாடு மேற்குவங்க மாநிலம் ஹௌரா வில், பிப்ரவரி 15 முதல் 18 வரை நடைபெற்றது.பிப்ரவரி 17 அன்று கொல்கத்தாவில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த பேரணி பொதுக்கூட்டத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

நிர்வாகிகள் தேர்வு 

இறுதி நாளான சனிக்கிழமை அகில இந்திய நிர்வா கிகள் தேர்வு நடைபெற்றது.அகில இந்திய தலைவ ராக ஏ.விஜயராகவன், பொதுச் செயலாளராக பி.வெங்கட் மற்றும் துணைத் தலைவர்களாக எம்.வி. கோவிந்தன் மாஸ்டர், அமியா பத்ரா, கோமளகுமாரி, ஏ.லாசர், பானுலால் சாகா, ஜி.நாகையா, பூப் சந்த் சானு; இணைச் செயலாளர்களாக விக்ரம் சிங், டாக்டர் பி.சிவதாசன், துஷார் கோஸ், என்.சந்திரன், பிரிஜ்லால்  பார்தி, வி.வெங்கடேஷ்வரலு ஆகிய 15 பேர் நிர்வாகி களாக தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாட்டிலிருந்து வீ.அமிர்தலிங்கம், எம்.சின்ன துரை எம்எல்ஏ, அ.பழநிசாமி, எஸ்.பூங்கோதை உள்ளிட்ட 61 பேர் மத்திய செயற்குழுவுக்கும், எஸ். சங்கர், வீ.மாரியப்பன், பி.வசந்தாமணி, மலைவிளை பாசி, அ.து.கோதண்டன், ஜி.கணபதி, எம்.முத்து, க.சண்முகவள்ளி, எஸ்.பிரகாஷ் உள்ளிட்ட 156 பேர் மத்திய கவுன்சில் உறுப்பினர்களாகவும் தேர்வு செய் யப்பட்டனர்.  மாநாட்டின் நிறைவாக மூத்த தலைவர்கள் ஹன்னன் முல்லா, சுனீத் சோப்ரா, நித்யானந்த சுவாமி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.