மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இந்த ஆண்டுக்கான அரவையை உடனடியாக துவக்கக்கோரி கடந்த ஆண்டு டிசம்பர் 14 அன்று தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் துவங்கிய போராட்டம் 36 ஆவது நாளாக ஜனவரி 18 செவ்வாய்க்கிழமையன்றும் தொடர்ந்து நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தேனி, சிவகங்கை, விருதுநகர் மாவட்ட விவசாயிகளும் பங்கேற்றுள்ளனர்.