tamilnadu

img

“தூய்மையான இலங்கை” திட்டத்தை தொடங்கினார் அனுர

நேர்மையான மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாக நிலையான தேசத்தை உரு வாக்குவதை நோக்கமாகக் கொண்ட “தூய்மையான இலங்கை” என்ற தேசிய வேலைத்திட்டத்தை இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க புதன்கிழமை தொடங்கி வைத்தார்.  2025 ஆம் ஆண்டை இலங்கையில் ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தின் தொடக்கமாக அறிவித்து, மாற்றத்தை ஏற்படுத்த தனது நிர்வாகம் அர்ப்பணிப்புடன் உறுதி பூண்டுள்ளது என்று திஸாநாயக்க கூறினார். “தூய்மையான இலங்கை”முயற்சியானது சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் தூய்மை மற்றும் புத்துணர்ச்சியை உருவாக்க விரும்புகிறது என்று திஸாநாயக்க கூறினார். மேலும் அதன்  இலக்குகளை அடைய தீவிரமான பொது பங் கேற்பின் அவசியத்தை பற்றியும் அவர் வலி யுறுத்தினார். கிராமப்புற வறுமையை ஒழித்தல் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்குதல் உள்ளிட்ட அரசாங்கத்தின் மூன்று முதன்மை இலக்குகளில் இந்த முயற்சி ஒன்றாகும். ஊழல், லஞ்சம் மற்றும் பொது நிதியை தவறாகப் பயன்படுத்துவது ஆகியவை நாட்டில் வேரூன்றிய பிரச்சனைகளாக மாறியுள்ளன என்று குறிப்பிட்ட திஸாநாயக்க,தேசிய பாதுகாப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கான தனது நிர்வாகத்தின் உறுதிப் பாட்டையும் சுட்டிக்காட்டினார்.