tamilnadu

img

தனியார்மயத்திற்கு துணைபோன அதிமுக அரசு! - - வீ. பிச்சை ,துணைத்தலைவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம்

அதிமுக அரசு ஆரம்பம் முதலே தனியாருக்கு சாதக மாகவே செயல்பட்டது.  1991  ஆகஸ்ட் மாதத்தில் மத்திய திட்டக்குழு அரசு போக்கு வரத்தை படிப்படியாக தனி யார்மயப்படுத்தல் வேண்டும்  என சுற்றறிக்கை மாநிலங்க ளுக்கு அனுப்பியது. இதை யொட்டி பல மாநில அரசாங்கங்கள் போக்கு வரத்தை தனியார்மயப் படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டன. 1992 ஆண்டு அதிமுக  தலைமையிலான தமிழக அரசு சட்டமன்றத்தில் (தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் சிறப்பு  ஏற்பாடுகள் சட்டம் 1992)-ஐ இயற்றியது. அதில் அங்கீகரிக்கப்பட்ட திட்ட வழித்தடங்களில் தற்போதுள்ள தனியார் பஸ் நிறுவனத்தினர் செயல்பட  அனுமதிக்கலாம் எனவும், தற்போது இயக்கப்படும் வழித்தடம் மற்றும் அதன் நீளம் என்ற அளவில் தொடர்ந்து இயக்கப் படலாம் எனவும், அங்கீகரிக்கப்பட்ட மாறுபாடுகளை அனுமதிக்கலாம் எனவும், அங்கீகரிக்கப்பட்ட வழித்தடங்களில் புதிய  அனுமதி வழங்கப்படாது என கூறப் ப்பட்டது.

தேசியமயமாக்க முடியாத நிலையை உருவாக்கிய அதிமுக அரசு

இந்த திருத்தத்தின் மூலம் மாவட்டங்க ளில் ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டி ருந்த தனியார்  பேருந்துகளை மாவட்ட அளவில் உருவான தேசியமயத் திட்டத்தின் கீழ் கொண்டு வர இயலாத நிலையை அன்றைய அதிமுக அரசு உரு வாக்கியது. அரசின் இந்த நடவடிக்கையை தனியார்  பஸ் உரிமையாளர்கள் பாராட்டினர். எதிர்காலத்தில் தனியார்களுக்கும், மாவட்டத்தில் புதிய வழித்தடங்களை வழங்குவதற்கு அனுமதி வழங்க வேண்டு மென்ற கோரிக்கையை அரசுக்கு விடுத்த னர். அதிமுக தலைமையிலான அரசாங்கம் 2001-இல் பொறுப்பேற்றதற்கு பின்பாக, 09.03.2002-இல் சட்டமன்றத்தில் ஆளுநர் ராம்மோகன்ராவ் உரையாற்றும்போது, படிப்படியாக பேருந்து சேவையை தனி யார்மயமாக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்தார். அதையொட்டி தனி யார்மயப்படுத்துவதற்கான உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு, எந்த எந்த வழித் தடங்களை தனியார்மயப்படுத்தலாம் என முடிவு செய்யப்பட்டது.   இதையொட்டி போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் அந்த வழித் தடங்களை ஏலம் மூலம் கொடுப்பதற்கு குறைந்தபட்ச விலையும் தீர்மானிக் கப்பட்டது. அதையொட்டி அறிவிப்பாணை 12.11.2002-இல் வெளியிடப்பட்டது.  2002 நவம்பர் 12-இல் மாநில அரசு –தேசியமயமாக்கப்பட்ட போக்குவரத்து கழகத்தின் வழித்தடங்களின் 50 சதவீதம் பேருந்துகளை தனியார் இயக்க லாம் என அரசாணை 2002-ல் வெளி யிடப்பட்டது. அரசின் இந்த தனியார்மய  நடவடிக்கைகளை எதிர்த்து போக்கு வரத்து மாநில சம்மேளனம் பல்வேறு போராட்ட நடவடிக்கைகளுக்கு திட்ட மிட்டது.

தனியார்மய நடவடிக்கை தடுத்து நிறுத்தம்

பல்லாயிரக்கணக்கான தொழிலா ளர்கள் பங்கேற்ற நடைபயணம், மனிதச்சங்கிலி, தெருமுனைக் கூட்டங்கள், சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பி னர்கள், ஊராட்சி, நகராட்சித் தலை வர்கள், மேயர்களை சந்தித்து தனியார்மய ஆபத்து பற்றி எடுத்துச் சொல்லி ஆதரவு திரட்டப்பட்டது. சிஐடியு சம்மேளனம் சுயேச்சையான இயக்கம் நடத்தியதுடன் பல சங்கங்களையும் இணைத்துக் கொண்டு கூட்டுப் போராட்டங்களையும் நடத்தியது.      நமது சம்மேளனம் எடுத்த முடிவின் அடிப்படையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். நீதிமன்றத்தில் அரசு உடைமையாக்கப்பட்ட பஸ்களை தனியாருக்கு தாரைவார்க்க சட்டத்தில் இடமில்லை என்பதால், இந்த அறிவி க்கையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி சிஐடியு மாநில சம்மேள னம் எழுப்பிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது. நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டதை யொட்டி போக்குவரத்து கழகங்களை அடிமாட்டு விலைக்கு விற்க அதிமுக அரசு எடுத்த தனியார்மய நடவடிக்கையை தடுத்து நிறுத்தினோம். அதிமுக அரசாங்கம் சென்னையில் தனியார் மினி பஸ் சேவை துவக்க எடுத்த  முயற்சி தோல்வி அடைந்த பின்னணியில் 23.10.2013-இல் போக்குவரத்து கழகத்தால் நடத்தப்படும் மினி பஸ் சேவை  துவங்கியது. போக்குவரத்து கழகங்களே மினி பஸ் சேவையை நடத்த முடியும் என நமது சம்மேளனம் 1997-இல் தெரி வித்தது, 2013-இல் சாத்தியமானது. மோட்டார் வாகனச் சட்டப் பிரிவு 6 மாநில போக்குவரத்து நிறுவனங்களுக்கு உரிய சிறப்புப் பிரிவாகும்.

இதன் அடிப் படையில்; மாவட்டங்களில் அல்லது மாநிலத்தில் சில குறிப்பிட்ட வழித்தடத் திட்டங்களை உருவாக்கி, அதில் அரசு போக்குவரத்து கழகங்கள் மட்டுமே பேருந்தை இயக்க முடியும், அவ்வாறு இறுதிப்படுத்தப்பட்ட வழித்தடங்களில் தனியார் பேருந்து இயங்க முடி யாது என்பது தான் தற்போது சட்ட முறையாகும். கடந்த அதிமுக தலைமை யிலான தமிழ்நாடு அரசு மோட்டார்  வாகன சட்ட விதி 288-இல் ஒரு திருத்தத்தை மேற்கொண்டு 288(யு) என்ற ஒரு புதிய பிரிவை உருவாக்கியது. இப்பிரிவில், தனியார் பஸ் நிறுவனத்தின் பேருந்துகளை ஒரு குறிப்பிட்ட வாடகை நிச்சயித்து, போக்குவரத்துக் கழகங்களின் வழித்தடங்களில் இயக்குவதற்கு அனுமதி  வழங்கப்படும் என திருத்தம் மேற்கொண் டது.   இந்த திருத்தம் நடைமுறைக்கு வரும்  போது தனியார் பேருந்து உரிமையா ளர்கள் அவர்களது ஓட்டுநர்கள் மூலம் பேருந்துகளை, போக்குவரத்துக் கழ கத்தின் வழித்தடத்தில் இயக்குவதற்கும், மேலும் பேருந்தின் பராமரிப்பை தனியார் மேற்கொள்வார்கள். நடத்துனர் மட்டும் அரசு போக்குவரத்து கழக நடத்துனராக செயல்படுவார். 

தனியார்மயத்துக்கு வித்திட்ட அதிமுக ஆட்சி 

அதிமுக அரசு கொண்டு வந்த இச்சட்டத் திருத்தத்தின்படி 18 ஆயிரம் பேருந்துகளையும் தனியாரிடம் வாடகைக்கு எடுக்க, இச்சட்டத் திருத்தம் வழிவகுத்தது. எதிர்காலத்தில் புதிய பேருந்துகள் வாங்காமலேயே தனியார் பேருந்துகளை வாடகைக்கு அமர்த்தி, அரசு போக்குவரத்து கழகங்கள் இயக்க, கடந்த அதிமுக ஆட்சி முழுமையான தனியார்மயத்திற்கு வித்திட்டது. மேலும், கடந்த அதிமுக அரசு,  பணமில்லா பரிவர்த்தனை அடிப்படையி லும் பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொண்டது. அதற்காக தமிழ்நாடு மோட்டார் வாகன சட்ட விதி 227-ஐ  திருத்தம் செய்தது. இந்த விதி திருத்தத்தின்  மூலம் நடத்துநர் இல்லாமல் பேருந்துகளை  இயக்க முடியும்.    ஆகவே, போக்குவரத்து கழக வழித்தடங்களில் தனியார் பேருந்தை வாடகைக்கு எடுத்து இயக்குவதன் மூலம் அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர் மற்றும் பராமரிப்பு தொழிலாளர்கள் வெளி யேற்றப்படுவார்கள். பேருந்துகளில் பணமற்ற பரிவர்த்தனையை கொண்டு வரு வதன் மூலம் நடத்துநர்கள் போக்குவரத்து  கழகங்களில் இருந்து வெளியேற்றப்படு வார்கள் என்ற ஆபத்தை கடந்த அதிமுக அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது. 

மாநில அரசு அதிகாரங்கள் பறிப்பு

ஒன்றிய அரசு ஏற்கனவே மோட்டார் வாகன சட்டத்தை திருத்தியுள்ளது. ஒரு தேசம் ஒரு லைசன்ஸ் என்ற கொள்கை அமுல்நடத்தப்படுகிறது. பேருந்துகளை வழித்தடத்தில் செலுத்துவதற்கு அனுமதி மற்றும் உரிமத்தை வழங்கும் அதிகாரம் மாநில அரசுகளிடம் இருந்து  பறிக்கப்பட்டு, ஒன்றிய அரசு இனிமேல் தனி  உரிமம் வழங்கும் என திருத்தம் மேற்கொள் ளப்பட்டுள்ளது. இந்த திருத்தம் மாநில போக்குவரத்து கழகங்களை கடுமையாக பாதிக்கும்.  ஏற்கனவே 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக அரசு தமிழ்நாடு மோட்டார்  வாகன சட்ட விதி 288(யு)இ 227 திருத்தங்க ளோடு ஒன்றிய அரசின் திருத்தங்களும் தமிழக போக்குவரத்து கழகங்களின் எதிர் காலத்தை மிகப்பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி உள்ளது.  தமிழக போக்குவரத்து கழகங்கள் மக்கள் சேவையில் 50 ஆண்டுகள் (1972-2022) நிறைவு செய்துள்ளன. இந்த 50  ஆண்டுகளில் தமிழக கிராமப்புற பொரு ளாதார முன்னேற்றத்திற்கும், மாணவர்க ளின் கல்வி மேம்பாட்டிற்கும், கிராமங் களை நகர்ப்புறத்தோடு இணைப்பதன் மூலம் அதன் பொருளாதார முன்னேற் றங்களுக்கும் பெரும் பங்களிப்பை செய்துள்ளன.  எனவே, தற்போது பொறுப்பேற்றுள்ள திமுக தலைமையிலான அரசாங்கம், கடந்த  அதிமுக அரசு மோட்டார் வாகன சட்டவிதி  227, 288-ல் மேற்கொண்ட திருத்தங்களை ரத்து செய்து, போக்குவரத்து கழகங்களை அரசே தொடர்ந்து நடத்துவதற்கும், தமிழக  போக்குவரத்து கழகங்கள் நிதி சிரம மின்றி செயல்படுவதற்கும், உரிய நிதியளிப்பதுடன் தமிழகத்தில் வாகன பெருக்கத்தை கட்டுபடுத்துவதற்கும், சுற்றுச்சூழலை பாதுகாக்கப்பதற்கும், தமிழகத்தில் பொதுப் போக்குவரத்தை பலப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழக போக்குவரத்து தொழிலாளர்களும் அரசு பேருந்துகளை பயன்படுத்தும் சாதாரண மக்களோடு இனக்கமாக நடந்து  கொண்டு பொதுமக்களுடனான நல்உறவை மேம்படுத்த வேண்டும்.