கடந்த பத்து ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்து அதிமுக அரசு, தனது 2011 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் 186 வாக்கு றுதிகளும், 2016 ஆம் ஆண்டில் 321 வாக்குறு திகளும் என மொத்தம் 507 வாக்குறுதி களை அளித்தது. ஆனால், பத்து ஆண்டு காலத்தில் இரண்டாவது முறையாக வும் ஆட்சிக்கு வந்தும் 269 வாக்குறுதிக ளுக்கு மட்டுமே அரசாணை வெளியிட்டிருக் கிறார்கள். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டிலேயே 505 வாக்குறுதிகளில் 208 வாக்குறுதிகளுக்கான அறிவிப்புகள் வெளியிட்டு அவற்றில 171 வாக்குறுதிக ளுக்கு அரசாணையும் வழங்கி செயல் படுத்தி வருகிறது. முந்தைய அதிமுக ஆட்சியின்போது பேரவை விதி 110-இன் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் அனைத்தும் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு அறிவிக்கப்பட்டதாகும்.
கிட்டத்தட்ட அனைத்து நிதி ஒதுக்கீடு தேவைப்படும் அறிவிப்புகளுக்கும், தொடர்புடைய துறைகளின் மானியக் கோரிக்கைகளில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. உதாரணத்திற்கு, செயல்படுத்தப்படா மல் நிலுவையிலுள்ள 537 அறிவிப்புகளில் ரூ.5,470 கோடி திட்ட மதிப்பிலான 26 அறிவிப்புகளை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் எதையும் ஆராயாமல், ஆய்வு செய்யாமல் அறிவித்தனர். இதனால் கைவிடப்பட்டுள்ளது. 491 அறிவிப்பு களுக்கு மட்டுமே அரசாணை மற்றும் அனுமதிகள் வழங்கப்பட்டன. இவற்றில் ரூ.76,619 கோடிக்கு மதிப்பிலான 143 அறிவிப்புகளுக்கு நிதி ஒதுக்கப்பட வில்லை. பணிகளும் தொடங்கப்பட வில்லை. அதேபோல், சென்னை திருமழிசை, மதுரை விமான நிலையத்துக்கு அருகில் ஒருங்கிணைந்த துணைகோள் நகரங்கள், குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு இலவச செல்போன் வழங்கப்படும், பொது இடங்களில் இலவச வை-பை, அம்பேத்கர் அறக்கட்டளை நிறுவபப் படும், சென்னை முதல் குமரி வரை கடலோரச் சாலைத் திட்டம், தென் தமிழகத்தில் ‘ஏரோ பார்க்’ ஆன்லைன் டிரேடிங் தடுக்கப்படும், மொபைல் மின்னணு ஆளுமைத் திட்டம். குடும்ப அட்டை வைத்திருப்பர்கள் கோ-ஆப்டெக்சில் பொங்கல் பண்டிக்கைக்கு துணை எடுக்க ரூ.500 மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும்.
ஒரு லிட்டர் பால் ரூ.25 க்கு வழங்குவோம், மகளிர் மற்றும் குழந்தைகள் நலன் காக்கும் வகை யில் வைட்டமின் டி மற்றும் இருப்புச் சத்துக்கள் செறிவூட்டப்பட்டஆவின் பால் ஒரு லிட்டர் 25 ரூபாய்க்கு குறைந்த விலையில் வழங்கப்படும் என்ற வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட வில்லை. உலக முதலீட்டாளர்கள் மாநாடு இரண்டு வருடத்துக்கு ஒரு முறை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் ஒரு முறை மட்டுமே உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்திருக்கிறது. மீனம்பாக்கம்-செங்கற்பட்டு இடையே உயர்நிலை நெடுஞ்சாலை மேம்பாலம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. தடையில்லா மின்சாரத்துக்கு சிறப்புத் திட்டம், இலவசமாக டிடிஎச் சேவைகள் விரைவாக வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட பல்வேறு அறிவிப்புகள் அனைத்துமே இன்னும் வெற்று அறிவிப்புகளாக பத்து ஆண்டு காலமாக காகிதத்திலேயே உள்ளன. மேலும், அவை விளம்பர நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டவை. அதிமுகவினர் கடந்த பத்து ஆண்டுகாலத்தில் நிறைவேற்றாமல் விட்ட அறிவிப்புகளில் மக்களுக்கு மிக வும் பயன்படும் தேவைப்படும் திட்டங்களை மக்கள் நலனை மட்டுமே முன்னுறுத்தி நிறைவேற்றப்படும். (முதலமைச்சரின் உரையிலிருந்து)