நாகர்கோவில், மார்ச்.4- கொல்லங்கோடு நக ராட்சி தலைவர் பொறுப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கி திமுக தலைமை அறிவித்திருந்தது. அதற்கு மாறாக அதிமுக கவுன்சிலருடன் கைகோர்த்து மார்க்சிஸ்ட் வேட்பாளர் இ.லலிதாவை வீழ்த்தினர் திமுக கவுன்சிலர்கள். கன்னியாகுமரி மாவட்டத் தில் புதிதாக உருவாக்கப் பட்ட கொல்லங்கோடு நக ராட்சியில் மொத்தம் 33 வார்டு கள் உள்ளன. இதில் திமுக 10, சிபிஎம் 10 காங்கிரஸ் 6, பாஜக 5, அதிமுக 1, தேமுதிக 1 என கட்சிகள் வெற்றி பெற்றிருந்தன. திமுக தலை மையிலான கூட்டணியில் கொல்லங்கோடு நகராட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதாக திமுக தலைமை அறி வித்தது. அதன்படி சிபிஎம் வேட்பாளராக இ.லலிதா வேட்புமனு தாக்கல் செய் தார். ஆனால் திமுக சார்பி லும் அதன் வேட்பாளராக ராணி மனு தாக்கல் செய்தார். பாஜக வேட்பாளராக சுதா வேட்புமனு தாக்கல் செய்தார். வெள்ளியன்று நடந்த வாக்குப்பதிவில் லலிதா 10 வாக்குகள் மட்டும் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார். திமுக வேட்பாளர் ராணி 18 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். பாஜக 5 வாக்குகள் பெற்றது.